கோவையில் ரேசன் கடைகளில் விரல் ரேகை பதிவு செய்ய முடியாமல் முதியவர்கள் தவிப்பு..!

கை ரேகை பதிக்கும் பயோ மெட்ரிக்ஸ் இயந்திரத்தில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரேஷன் பொருட்களை விநியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. மேலும், முதியவர்கள் பலருக்கும் வயது முதிர்வு காரணமாக விரல் ரேகை பதிவு பெறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


கோவை: கை ரேகை பதிக்கும் பயோ மெட்ரிக்ஸ் இயந்திரத்தில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரேஷன் பொருட்களை விநியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே கார்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனை அடுத்து கோவை மாவட்டத்தில் உள்ள 1420-ரேசன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களிடம் விரல் ரேகை பதிவு செய்யப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, கை ரேகை பதிக்கும் பயோ மெட்ரிக்ஸ் இயந்திரத்தில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு காரணமாகப் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை விநியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. மேலும், முதியவர்கள் பலருக்கும் வயது முதிர்வு காரணமாக விரல் ரேகை பதிவு பெறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், முதியவர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட வழங்கல் பிரிவு அதிகாரி கூறியதாவது:-

இந்த திட்டத்தின்படி, குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் யாராவது ஒருவர் கண்டிப்பாக ரேஷன் கடைக்கு வர வேண்டும். அவர்களின் விரல் ரேகையைப் பயன்படுத்தி ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். இதன்மூலம், ஒருவரின் ரேஷன் கார்டை பயன்படுத்தி மற்றவர்கள் பொருட்கள் வாங்குவது தடுக்கப்படுகிறது.

தற்போது, அந்த இயந்திரத்தின் சர்வர் (server) வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. முதியவர்களுக்கு விரல் ரேகை பதிவு செய்யமுடியவில்லை என்றால் அட்டையில் உள்ள மற்ற உறுப்பினர்கள் விரல் ரேகை பதிவு செய்து பொருட்கள் வாங்கலாம்.

இல்லையென்றால், சம்மந்தப்பட்ட ரேசன் கடையில் உள்ள ஊழியரிடம் விண்ணப்பம் படிவம் பெற்று மாவட்ட வழங்கல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். விசாரணைக்குப் பின், அவர் விரல் ரேகை இல்லாமல் பொருட்கள் வாங்க ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...