கோவையில் ரேசன் கடைகளில் விரல் ரேகை பதிவு செய்ய முடியாமல் முதியவர்கள் தவிப்பு..!

கை ரேகை பதிக்கும் பயோ மெட்ரிக்ஸ் இயந்திரத்தில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரேஷன் பொருட்களை விநியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. மேலும், முதியவர்கள் பலருக்கும் வயது முதிர்வு காரணமாக விரல் ரேகை பதிவு பெறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


கோவை: கை ரேகை பதிக்கும் பயோ மெட்ரிக்ஸ் இயந்திரத்தில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரேஷன் பொருட்களை விநியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே கார்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனை அடுத்து கோவை மாவட்டத்தில் உள்ள 1420-ரேசன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களிடம் விரல் ரேகை பதிவு செய்யப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, கை ரேகை பதிக்கும் பயோ மெட்ரிக்ஸ் இயந்திரத்தில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு காரணமாகப் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை விநியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. மேலும், முதியவர்கள் பலருக்கும் வயது முதிர்வு காரணமாக விரல் ரேகை பதிவு பெறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், முதியவர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட வழங்கல் பிரிவு அதிகாரி கூறியதாவது:-

இந்த திட்டத்தின்படி, குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் யாராவது ஒருவர் கண்டிப்பாக ரேஷன் கடைக்கு வர வேண்டும். அவர்களின் விரல் ரேகையைப் பயன்படுத்தி ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். இதன்மூலம், ஒருவரின் ரேஷன் கார்டை பயன்படுத்தி மற்றவர்கள் பொருட்கள் வாங்குவது தடுக்கப்படுகிறது.

தற்போது, அந்த இயந்திரத்தின் சர்வர் (server) வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. முதியவர்களுக்கு விரல் ரேகை பதிவு செய்யமுடியவில்லை என்றால் அட்டையில் உள்ள மற்ற உறுப்பினர்கள் விரல் ரேகை பதிவு செய்து பொருட்கள் வாங்கலாம்.

இல்லையென்றால், சம்மந்தப்பட்ட ரேசன் கடையில் உள்ள ஊழியரிடம் விண்ணப்பம் படிவம் பெற்று மாவட்ட வழங்கல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். விசாரணைக்குப் பின், அவர் விரல் ரேகை இல்லாமல் பொருட்கள் வாங்க ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...