கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

மேட்டுப்பாளையத்தில் இயங்கிவரும் இணைந்த கரங்கள் மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.


கோவை: கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இணைந்த கரங்கள் மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கத்தினர் 20க்கும் மேற்பட்டோர் மனு அளிக்க வந்திருந்தனர்.

அவர்கள் அளித்த மனுவில், மேட்டுப்பாளையத்தில் இயங்கிவரும் இணைந்த கரங்கள் மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கத்தில் 150க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் அனைவரும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருப்பவர்கள் என்றும், முறையான கல்வித் தகுதிகள் இருந்தும் நிலையான பணிக்கு செல்ல முடியாமல் தவித்து வருவதாக கூறினர்.

எனவே, அரசாங்கத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்புகளை ஒதுக்கித்தர வேண்டும் எனவும், மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை 1000 ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக உயர்த்தி தரவேண்டும் என்றும், பசுமை வீடு திட்டத்தின் கீழ் இலவச இடத்துடன் புதிய வீடு கட்டிக் கொடுத்து உதவ வேண்டுமென குறிப்பிட்டிருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...