கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

மேட்டுப்பாளையத்தில் இயங்கிவரும் இணைந்த கரங்கள் மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.


கோவை: கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இணைந்த கரங்கள் மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கத்தினர் 20க்கும் மேற்பட்டோர் மனு அளிக்க வந்திருந்தனர்.

அவர்கள் அளித்த மனுவில், மேட்டுப்பாளையத்தில் இயங்கிவரும் இணைந்த கரங்கள் மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கத்தில் 150க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் அனைவரும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருப்பவர்கள் என்றும், முறையான கல்வித் தகுதிகள் இருந்தும் நிலையான பணிக்கு செல்ல முடியாமல் தவித்து வருவதாக கூறினர்.

எனவே, அரசாங்கத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்புகளை ஒதுக்கித்தர வேண்டும் எனவும், மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை 1000 ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக உயர்த்தி தரவேண்டும் என்றும், பசுமை வீடு திட்டத்தின் கீழ் இலவச இடத்துடன் புதிய வீடு கட்டிக் கொடுத்து உதவ வேண்டுமென குறிப்பிட்டிருந்தனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...