கோவையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யக் கோரி பாஜகவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு!!

ஆர்.எஸ் புரம் மைதானத்தில் குடிசைகள் அமைத்து தங்கியுள்ள பொதுமக்கள் கனமழையில் சாக்கடை நீரும், மழை நீரும் ஒன்றாகக் கலந்து வீட்டிற்குள் வருவதாக மனு அளித்தனர்.


கோவை: கோவையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யக் கோரி பாஜகவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை ஆர்.எஸ். புரம் காமராஜர் சந்து பொதுமக்கள் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய வேண்டும் என்றும், வணிக ரீதியாக உள்ள மின்சார கட்டணத்தை முறைப்படுத்த கோரியும் கோவை மாநகர பாரதிய ஜனதா கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:-

கோவை காந்தி பார்க் அருகில் இருந்த காமராஜர் சந்து பொதுமக்களுக்கு கடந்த 2019ம் ஆண்டு மாற்று இடம் ஏற்படுத்துதல் சம்பந்தமாக மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிசை மாற்று நிர்வாகமும் தற்காலிகமாக ஆர்.எஸ் புரம் மைதானத்தில் குடிசைகள் அமைத்து தங்கவைத்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அடிப்படை தேவைகளான சுகாதாரம், குடிநீர் போன்றவை கிடைக்காமல் தவித்து வருவதாகவும், கன மழையில் சாக்கடை நீரும் மழை நீரும் ஒன்றாகக் கலந்து வீட்டிற்குள் வருவதாகவும் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக பட்டியல் அணி செயலாளர் கரிகாலன் தலைமையில் பாஜகவினர் மனு அளித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...