ஆர்.எஸ் புரம் மைதானத்தில் குடிசைகள் அமைத்து தங்கியுள்ள பொதுமக்கள் கனமழையில் சாக்கடை நீரும், மழை நீரும் ஒன்றாகக் கலந்து வீட்டிற்குள் வருவதாக மனு அளித்தனர்.
கோவை: கோவையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யக் கோரி பாஜகவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை ஆர்.எஸ். புரம் காமராஜர் சந்து பொதுமக்கள் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய வேண்டும் என்றும், வணிக ரீதியாக உள்ள மின்சார கட்டணத்தை முறைப்படுத்த கோரியும் கோவை மாநகர பாரதிய ஜனதா கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:-
கோவை காந்தி பார்க் அருகில் இருந்த காமராஜர் சந்து பொதுமக்களுக்கு கடந்த 2019ம் ஆண்டு மாற்று இடம் ஏற்படுத்துதல் சம்பந்தமாக மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிசை மாற்று நிர்வாகமும் தற்காலிகமாக ஆர்.எஸ் புரம் மைதானத்தில் குடிசைகள் அமைத்து தங்கவைத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அடிப்படை தேவைகளான சுகாதாரம், குடிநீர் போன்றவை கிடைக்காமல் தவித்து வருவதாகவும், கன மழையில் சாக்கடை நீரும் மழை நீரும் ஒன்றாகக் கலந்து வீட்டிற்குள் வருவதாகவும் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக பட்டியல் அணி செயலாளர் கரிகாலன் தலைமையில் பாஜகவினர் மனு அளித்தனர்.
கோவை ஆர்.எஸ். புரம் காமராஜர் சந்து பொதுமக்கள் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய வேண்டும் என்றும், வணிக ரீதியாக உள்ள மின்சார கட்டணத்தை முறைப்படுத்த கோரியும் கோவை மாநகர பாரதிய ஜனதா கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:-
கோவை காந்தி பார்க் அருகில் இருந்த காமராஜர் சந்து பொதுமக்களுக்கு கடந்த 2019ம் ஆண்டு மாற்று இடம் ஏற்படுத்துதல் சம்பந்தமாக மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிசை மாற்று நிர்வாகமும் தற்காலிகமாக ஆர்.எஸ் புரம் மைதானத்தில் குடிசைகள் அமைத்து தங்கவைத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அடிப்படை தேவைகளான சுகாதாரம், குடிநீர் போன்றவை கிடைக்காமல் தவித்து வருவதாகவும், கன மழையில் சாக்கடை நீரும் மழை நீரும் ஒன்றாகக் கலந்து வீட்டிற்குள் வருவதாகவும் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக பட்டியல் அணி செயலாளர் கரிகாலன் தலைமையில் பாஜகவினர் மனு அளித்தனர்.