கோவையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யக் கோரி பாஜகவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு!!

ஆர்.எஸ் புரம் மைதானத்தில் குடிசைகள் அமைத்து தங்கியுள்ள பொதுமக்கள் கனமழையில் சாக்கடை நீரும், மழை நீரும் ஒன்றாகக் கலந்து வீட்டிற்குள் வருவதாக மனு அளித்தனர்.


கோவை: கோவையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யக் கோரி பாஜகவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை ஆர்.எஸ். புரம் காமராஜர் சந்து பொதுமக்கள் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய வேண்டும் என்றும், வணிக ரீதியாக உள்ள மின்சார கட்டணத்தை முறைப்படுத்த கோரியும் கோவை மாநகர பாரதிய ஜனதா கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:-

கோவை காந்தி பார்க் அருகில் இருந்த காமராஜர் சந்து பொதுமக்களுக்கு கடந்த 2019ம் ஆண்டு மாற்று இடம் ஏற்படுத்துதல் சம்பந்தமாக மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிசை மாற்று நிர்வாகமும் தற்காலிகமாக ஆர்.எஸ் புரம் மைதானத்தில் குடிசைகள் அமைத்து தங்கவைத்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அடிப்படை தேவைகளான சுகாதாரம், குடிநீர் போன்றவை கிடைக்காமல் தவித்து வருவதாகவும், கன மழையில் சாக்கடை நீரும் மழை நீரும் ஒன்றாகக் கலந்து வீட்டிற்குள் வருவதாகவும் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக பட்டியல் அணி செயலாளர் கரிகாலன் தலைமையில் பாஜகவினர் மனு அளித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...