கோவை மத்தியச் சிறையில் மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் நீதிபதி பாஸ்கரன் ஆய்வு மேற்கொண்டார். சிறை வளாகம், சிறை மருத்துவமனை, தொழிற்கூடம், பெண்கள் சிறை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தார்.
கோவை: கோவை மத்தியச் சிறையில் மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் நீதிபதி பாஸ்கரன் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மத்தியச் சிறையில் விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், குற்றங்களுக்குத் தகுந்தவாறு பல்வேறு பிளாக்குகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கோவை மத்தியச் சிறையில், மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் நீதிபதி பாஸ்கரன்ஆய்வு மேற்கொண்டார்.
சிறை வளாகம், சிறை மருத்துவமனை, தொழிற்கூடம், பெண்கள் சிறை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்த அவா், கைதிகளிடம் மனித உரிமை மீறல்கள் ஏதாவது நடக்கின்றனவா, சிறைத் துறை அதிகாரிகள் துன்புறுத்தலில் ஈடுபட்டனரா என்பன போன்ற கேள்விகளைக் கேட்டு விசாரித்ததாகக் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, சிறைத்துறை அதிகாரிகளுடன் நீதிபதி ஆலோசனை நடத்தினார். கோவை சரக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம், கோவை மத்தியச் சிறைக் கண்காணிப்பாளர் ஊர்மிளா மற்றும் சிறைத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கோவை மத்தியச் சிறையில் விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், குற்றங்களுக்குத் தகுந்தவாறு பல்வேறு பிளாக்குகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கோவை மத்தியச் சிறையில், மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் நீதிபதி பாஸ்கரன்ஆய்வு மேற்கொண்டார்.
சிறை வளாகம், சிறை மருத்துவமனை, தொழிற்கூடம், பெண்கள் சிறை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்த அவா், கைதிகளிடம் மனித உரிமை மீறல்கள் ஏதாவது நடக்கின்றனவா, சிறைத் துறை அதிகாரிகள் துன்புறுத்தலில் ஈடுபட்டனரா என்பன போன்ற கேள்விகளைக் கேட்டு விசாரித்ததாகக் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, சிறைத்துறை அதிகாரிகளுடன் நீதிபதி ஆலோசனை நடத்தினார். கோவை சரக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம், கோவை மத்தியச் சிறைக் கண்காணிப்பாளர் ஊர்மிளா மற்றும் சிறைத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.