கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை தொடர்ந்து விலை ஏற்றம் - ஒரு கிலோ நாட்டுத்தக்காளி 114-ரூபாய்க்கு ஏலம்..!

தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த தக்காளிகள் செடியிலேயே அழுகியதால் தக்காளி வரத்து குறைந்து காணப்படுவதாகவும், மழை குறைந்து தக்காளி செடியில் நல்ல விளைச்சல் ஏற்பட்டால் மட்டுமே விலை குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: தமிழகத்தில் தொடர் மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் தக்காளி வரத்து குறைந்து தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள காய்கறி சந்தைக்கு தொடர்ந்து தக்காளியின் வரத்து குறைந்து காணப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை வரை 14 -கிலோ எடைகொண்ட நாட்டுத்தக்காளி ஆயிரம் ரூபாய் வியாபாரிகள் வியாபாரிகள் ஏலம் எடுத்தனர்.



ஆனால் இன்று கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் நடைபெற்ற தக்காளி ஏலத்தில் 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி நாட்டுத்தக்காளி ஆயிரத்து 600 ரூபாய்க்கு,அதாவது ஒருகிலோ 114 ரூபாய்க்கு ஏலம் போனது, இதேபோல் 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி ஆப்பிள்தக்காளி ஆயிரத்து 700 ரூபாய்க்கு ஏலம் போனது.

இதனால் வெளிச்சந்தையில் தக்காளியின் விலை 150 ரூபாய்க்கு மேல் விற்பனையாகும் என் எதிர்பார்க்கபடுகிறது.

தொடர் மழை காரணமாக கோவை, கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளில் உள்ள தக்காளிச் செடிகள் அறுவடைக்கு தயாராக இருந்த தக்காளிகள் செடியிலேயே அழுகியதால் தக்காளி வரத்து குறைந்து காணப்படுவதாகவும், மழை குறைந்து தக்காளி செடியில் நல்ல விளைச்சல் ஏற்பட்டால் மட்டுமே விலை குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...