கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை தொடர்ந்து விலை ஏற்றம் - ஒரு கிலோ நாட்டுத்தக்காளி 114-ரூபாய்க்கு ஏலம்..!

தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த தக்காளிகள் செடியிலேயே அழுகியதால் தக்காளி வரத்து குறைந்து காணப்படுவதாகவும், மழை குறைந்து தக்காளி செடியில் நல்ல விளைச்சல் ஏற்பட்டால் மட்டுமே விலை குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: தமிழகத்தில் தொடர் மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் தக்காளி வரத்து குறைந்து தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள காய்கறி சந்தைக்கு தொடர்ந்து தக்காளியின் வரத்து குறைந்து காணப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை வரை 14 -கிலோ எடைகொண்ட நாட்டுத்தக்காளி ஆயிரம் ரூபாய் வியாபாரிகள் வியாபாரிகள் ஏலம் எடுத்தனர்.



ஆனால் இன்று கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் நடைபெற்ற தக்காளி ஏலத்தில் 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி நாட்டுத்தக்காளி ஆயிரத்து 600 ரூபாய்க்கு,அதாவது ஒருகிலோ 114 ரூபாய்க்கு ஏலம் போனது, இதேபோல் 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி ஆப்பிள்தக்காளி ஆயிரத்து 700 ரூபாய்க்கு ஏலம் போனது.

இதனால் வெளிச்சந்தையில் தக்காளியின் விலை 150 ரூபாய்க்கு மேல் விற்பனையாகும் என் எதிர்பார்க்கபடுகிறது.

தொடர் மழை காரணமாக கோவை, கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளில் உள்ள தக்காளிச் செடிகள் அறுவடைக்கு தயாராக இருந்த தக்காளிகள் செடியிலேயே அழுகியதால் தக்காளி வரத்து குறைந்து காணப்படுவதாகவும், மழை குறைந்து தக்காளி செடியில் நல்ல விளைச்சல் ஏற்பட்டால் மட்டுமே விலை குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...