முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, கிணத்துக்கடவில் அதிமுகவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
கோவை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு,கிணத்துக்கடவில் அதிமுகவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான ஜெ. ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் இன்று அதிமுகவினர் அனுசரித்தனர்.
இதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு நகர அதிமுக சார்பில், ஜெயலலிதா ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. பழைய பேருந்து நிலையம் முன்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
மேலும், நடைபெறக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வது என உறுதி ஏற்றனர்.
இந்த நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் கிணத்துக்கடவு நகரச் செயலாளர் மூர்த்தி, மலுமிச்சம்பட்டி ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், முன்னாள் நகரச் செயலாளர் மனோகரன், லட்சுமணன், கண்ணம்மாள், சிங் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான ஜெ. ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் இன்று அதிமுகவினர் அனுசரித்தனர்.
இதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு நகர அதிமுக சார்பில், ஜெயலலிதா ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. பழைய பேருந்து நிலையம் முன்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
மேலும், நடைபெறக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வது என உறுதி ஏற்றனர்.
இந்த நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் கிணத்துக்கடவு நகரச் செயலாளர் மூர்த்தி, மலுமிச்சம்பட்டி ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், முன்னாள் நகரச் செயலாளர் மனோகரன், லட்சுமணன், கண்ணம்மாள், சிங் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.