தொடர் கனமழை காரணமாக இரைச்சல் பாறை நீர்வீழ்ச்சியில் ஆற்றில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கோவை: வால்பாறையில் பெய்த கனமழையால் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக மதியத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், இன்று அக்காமலை எஸ்டேட் புல் மலை வன பகுதி, கருமலை எஸ்டேட் வனப்பகுதியில் கனமழை பெய்தது.

இந்த கனமழையால் இரைச்சல் பாறை நீர்வீழ்ச்சியில் ஆற்றில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் நடுமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கலங்கிய நிலையில் வந்தது.

அப்போது, ஆற்றங்கரையோரம் மக்கள் யாருமில்லாததால் எவ்வித பாதிப்பும் இன்றி தண்ணீர் கடந்து சென்றது.
பின்னர், சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேல் பெய்த மழை குறைந்து இயல்பு நிலை திரும்பியது.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக மதியத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், இன்று அக்காமலை எஸ்டேட் புல் மலை வன பகுதி, கருமலை எஸ்டேட் வனப்பகுதியில் கனமழை பெய்தது.
இந்த கனமழையால் இரைச்சல் பாறை நீர்வீழ்ச்சியில் ஆற்றில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் நடுமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கலங்கிய நிலையில் வந்தது.
அப்போது, ஆற்றங்கரையோரம் மக்கள் யாருமில்லாததால் எவ்வித பாதிப்பும் இன்றி தண்ணீர் கடந்து சென்றது.
பின்னர், சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேல் பெய்த மழை குறைந்து இயல்பு நிலை திரும்பியது.