பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன்பு திரண்ட அனைத்து அரசியல் சமூக இயக்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் பழங்குடி மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டா நிலத்தில் அமைத்த குடிசைகளை அத்துமீறி அகற்றிய வனத்துறையினர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தினர்.
கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கல்லார்குடி மலைவாழ் மக்களின் தற்காலிக குடிசைகளை அகற்றிய வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ளது கல்லார்குடி மலை கிராமம். இங்கு சுமார் 100க்கும் மேற்பட்டோர் வசித்து வந்தனர். கடந்த 2019ம் ஆண்டு பெய்த கன மழையால் மலைவாழ் மக்களின் 21 குடிசைகள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டது.
பின்னர், அங்கிருந்த மலைவாழ் மக்களை தாய்முடி பகுதியில் உள்ள தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழக தொழிலாளர் குடியிருப்பில் தற்காலிகமாக வனத்துறையினர் தங்க வைத்தனர். பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நில பட்டா கோரி பல போராட்டங்களை நடத்தினர்.
இதன் விளைவாக கடந்த நவம்பர் 7ம் தேதி குடிசைகளை இழந்த 21 குடும்பங்களுக்கு தெப்பக்குளமேடு பகுதியில் நிலத்தை ஒதுக்கி தமிழக அரசு அவர்களுக்கு பட்டா வழங்கியது. இதன் தொடர்ச்சியாக பட்டா வழங்கப்பட்ட இடத்தில் மலைவாழ் மக்கள் சிலர் குடிசைகளை அமைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற வனத்துறையினர், பட்டா வழங்கப்பட்ட இடத்தை விடுத்து அனுமதி இல்லாமல் வனப்பகுதிக்குச் சொந்தமான இடத்தில் நீங்கள் குடிசைகள் அமைக்கக் கூடாது என்று கூறி அமைக்கப்பட்ட குடிசைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன்பு திரண்ட அனைத்து அரசியல் சமூக இயக்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் பழங்குடி மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டா நிலத்தில் அமைத்த குடிசைகளை அத்துமீறி அகற்றிய வனத்துறையினர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ளது கல்லார்குடி மலை கிராமம். இங்கு சுமார் 100க்கும் மேற்பட்டோர் வசித்து வந்தனர். கடந்த 2019ம் ஆண்டு பெய்த கன மழையால் மலைவாழ் மக்களின் 21 குடிசைகள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டது.
பின்னர், அங்கிருந்த மலைவாழ் மக்களை தாய்முடி பகுதியில் உள்ள தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழக தொழிலாளர் குடியிருப்பில் தற்காலிகமாக வனத்துறையினர் தங்க வைத்தனர். பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நில பட்டா கோரி பல போராட்டங்களை நடத்தினர்.
இதன் விளைவாக கடந்த நவம்பர் 7ம் தேதி குடிசைகளை இழந்த 21 குடும்பங்களுக்கு தெப்பக்குளமேடு பகுதியில் நிலத்தை ஒதுக்கி தமிழக அரசு அவர்களுக்கு பட்டா வழங்கியது. இதன் தொடர்ச்சியாக பட்டா வழங்கப்பட்ட இடத்தில் மலைவாழ் மக்கள் சிலர் குடிசைகளை அமைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற வனத்துறையினர், பட்டா வழங்கப்பட்ட இடத்தை விடுத்து அனுமதி இல்லாமல் வனப்பகுதிக்குச் சொந்தமான இடத்தில் நீங்கள் குடிசைகள் அமைக்கக் கூடாது என்று கூறி அமைக்கப்பட்ட குடிசைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன்பு திரண்ட அனைத்து அரசியல் சமூக இயக்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் பழங்குடி மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டா நிலத்தில் அமைத்த குடிசைகளை அத்துமீறி அகற்றிய வனத்துறையினர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.