ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கல்லார்குடி மலைவாழ் மக்களின் தற்காலிக குடிசைகளை அகற்றிய வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்..!

பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன்பு திரண்ட அனைத்து அரசியல் சமூக இயக்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் பழங்குடி மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டா நிலத்தில் அமைத்த குடிசைகளை அத்துமீறி அகற்றிய வனத்துறையினர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தினர்.


கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கல்லார்குடி மலைவாழ் மக்களின் தற்காலிக குடிசைகளை அகற்றிய வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ளது கல்லார்குடி மலை கிராமம். இங்கு சுமார் 100க்கும் மேற்பட்டோர் வசித்து வந்தனர். கடந்த 2019ம் ஆண்டு பெய்த கன மழையால் மலைவாழ் மக்களின் 21 குடிசைகள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டது.

பின்னர், அங்கிருந்த மலைவாழ் மக்களை தாய்முடி பகுதியில் உள்ள தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழக தொழிலாளர் குடியிருப்பில் தற்காலிகமாக வனத்துறையினர் தங்க வைத்தனர். பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நில பட்டா கோரி பல போராட்டங்களை நடத்தினர்.

இதன் விளைவாக கடந்த நவம்பர் 7ம் தேதி குடிசைகளை இழந்த 21 குடும்பங்களுக்கு தெப்பக்குளமேடு பகுதியில் நிலத்தை ஒதுக்கி தமிழக அரசு அவர்களுக்கு பட்டா வழங்கியது. இதன் தொடர்ச்சியாக பட்டா வழங்கப்பட்ட இடத்தில் மலைவாழ் மக்கள் சிலர் குடிசைகளை அமைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற வனத்துறையினர், பட்டா வழங்கப்பட்ட இடத்தை விடுத்து அனுமதி இல்லாமல் வனப்பகுதிக்குச் சொந்தமான இடத்தில் நீங்கள் குடிசைகள் அமைக்கக் கூடாது என்று கூறி அமைக்கப்பட்ட குடிசைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன்பு திரண்ட அனைத்து அரசியல் சமூக இயக்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் பழங்குடி மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டா நிலத்தில் அமைத்த குடிசைகளை அத்துமீறி அகற்றிய வனத்துறையினர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...