மேட்டுப்பாளையத்தில் சீலை உடைத்து கடையை திறந்த கடைகளின் உரிமம் ரத்து..!

வாடகை பாக்கி செலுத்தாமல் சீல் வைக்கபட்ட நகராட்சி கடைகளை அத்துமீறி சீலை உடைத்து கடையை திறந்த 22 கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படுவதாகவும், அத்துமீறியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும் நகராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.



மேட்டுப்பாளையம்: வாடகை பாக்கி செலுத்தாமல் சீல் வைக்கப்பட்ட நகராட்சி கடைகளை அத்துமீறி சீலை உடைத்து கடையைத் திறந்த 22-கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, அத்துமீறியவர்கள் மீது சிவில் வழக்கு தொடர உள்ளதாக நகராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்குச் சொந்தமாக 200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இவை ஏல முறையில் தனியாருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக நகராட்சி கடைகளை ஏலம் எடுத்தவர்கள் வாடகை பாக்கி செலுத்தாமல் இருந்ததால் நகராட்சிக்கு சுமார் ரூ.8.50-கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, நகராட்சி ஆணையாளர் வினோத் கடந்த மாதம் 27-ம்தேதி வாடகை நிலுவைத்தொகை வைத்திருந்த 22-கடைகளுக்கு அதிரடியாகச் சீல் வைத்தார்.

இந்த நிலையில் நேற்று கடையை வாடகைக்கு எடுத்தவர்கள் பாக்கி தொகையைச் செலுத்தாமலேயே சீல் வைத்ததை உடைத்து அத்துமீறித் திறந்தனர்.



இச்சம்பவம் குறித்து நகராட்சி மூலம் காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில் ஏற்கனவே சீல் வைத்து அனுமதி இல்லாமல் திறந்த கடைகளுக்கு மீண்டும் காவல்துறை பாதுகாப்புடன் நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.



அப்போது, சீல் வைக்க வந்த நகராட்சி அதிகாரிகளிடம் கடையை ஏலம் எடுத்த உரிமையாளர் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறை அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து நகராட்சி விதிகளை மதிக்காமல் அத்துமீறி சட்ட விரோதமாகச் சீல் வைக்கப்பட்டதை அகற்றிய காரணத்திற்காக 22 கடைகளை ஏலம் எடுத்தவர்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதாகவும், சம்பந்தப்பட்ட கடைகளில் அதற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ள நிலையில், அரசின் சீலை அகற்றிய குற்றத்திற்காக சிவில் வழக்கு தொடர உள்ளதாகவும் நகராட்சி ஆணையாளர் வினோத் தெரிவித்துள்ளார்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...