தனியார் நிறுவன பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சகோதரர்கள் மீது போலீசார் தாக்குதல், கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: தனியார் நிறுவன பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சகோதரர்கள் மீது போலீசார் தாக்குதல், கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த 25-வயது இளம்பெண் ஒரு மாலில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார்.
இவரை வாலிபர் ஒருவர் அடிக்கடி பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்தார். நேற்று முன்தினம் இளம்பெண் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். சுகுணாபுரம் பாலம் அருகே சென்றபோது பின்தொடர்ந்து வந்த அந்த வாலிபர் திடீரென இளம்பெண்ணின் தோளில் கை வைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
இளம்பெண் வாலிபரிடம் இருந்து தப்பி வீட்டுக்குச் சென்று நடந்த விவரங்களைச் சகோதரர் மற்றும் தந்தையிடம் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் அந்த வாலிபரின் வீட்டுக்குச் சென்று இது குறித்து கேட்டனர்.
அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி இளம்பெண்ணின் குடும்பத்தினரை, தாக்கியது குறித்து இளம் பெண் வீட்டார் குடும்பத்தில் போலீசில் புகார் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது கிழக்கு சுகுனாபுரம் பாலமுருகன் கோவில் தெருவைச் சேர்ந்த முகம்மத் நவ்பிக் 30, மற்றும் அவரது தம்பி முகமது நவ்சாத் இளம்பெண் குடும்பத்தினரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் மீது தாக்குதல், கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து முகம்மது நவ்பிக், முகமது நவ்சாத் ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த 25-வயது இளம்பெண் ஒரு மாலில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார்.
இவரை வாலிபர் ஒருவர் அடிக்கடி பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்தார். நேற்று முன்தினம் இளம்பெண் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். சுகுணாபுரம் பாலம் அருகே சென்றபோது பின்தொடர்ந்து வந்த அந்த வாலிபர் திடீரென இளம்பெண்ணின் தோளில் கை வைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
இளம்பெண் வாலிபரிடம் இருந்து தப்பி வீட்டுக்குச் சென்று நடந்த விவரங்களைச் சகோதரர் மற்றும் தந்தையிடம் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் அந்த வாலிபரின் வீட்டுக்குச் சென்று இது குறித்து கேட்டனர்.
அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி இளம்பெண்ணின் குடும்பத்தினரை, தாக்கியது குறித்து இளம் பெண் வீட்டார் குடும்பத்தில் போலீசில் புகார் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது கிழக்கு சுகுனாபுரம் பாலமுருகன் கோவில் தெருவைச் சேர்ந்த முகம்மத் நவ்பிக் 30, மற்றும் அவரது தம்பி முகமது நவ்சாத் இளம்பெண் குடும்பத்தினரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் மீது தாக்குதல், கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து முகம்மது நவ்பிக், முகமது நவ்சாத் ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.