கோவையில் தனியார் நிறுவன பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை: மிரட்டல் விடுத்த சகோதரர்கள் கைது..!

தனியார் நிறுவன பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சகோதரர்கள் மீது போலீசார் தாக்குதல், கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: தனியார் நிறுவன பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சகோதரர்கள் மீது போலீசார் தாக்குதல், கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த 25-வயது இளம்பெண் ஒரு மாலில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார்.

இவரை வாலிபர் ஒருவர் அடிக்கடி பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்தார். நேற்று முன்தினம் இளம்பெண் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். சுகுணாபுரம் பாலம் அருகே சென்றபோது பின்தொடர்ந்து வந்த அந்த வாலிபர் திடீரென இளம்பெண்ணின் தோளில் கை வைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

இளம்பெண் வாலிபரிடம் இருந்து தப்பி வீட்டுக்குச் சென்று நடந்த விவரங்களைச் சகோதரர் மற்றும் தந்தையிடம் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் அந்த வாலிபரின் வீட்டுக்குச் சென்று இது குறித்து கேட்டனர்.

அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி இளம்பெண்ணின் குடும்பத்தினரை, தாக்கியது குறித்து இளம் பெண் வீட்டார் குடும்பத்தில் போலீசில் புகார் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது கிழக்கு சுகுனாபுரம் பாலமுருகன் கோவில் தெருவைச் சேர்ந்த முகம்மத் நவ்பிக் 30, மற்றும் அவரது தம்பி முகமது நவ்சாத் இளம்பெண் குடும்பத்தினரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் மீது தாக்குதல், கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து முகம்மது நவ்பிக், முகமது நவ்சாத் ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...