கோவையில் தனியார் நிறுவனம் சார்பில் அரசு பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கல்..!

கோவையில் தனியார் நிறுவனம் சார்பில் அரசு பள்ளியில் பயிலும் ஏழ்மை நிலையில் உள்ள 352-மாணவிகளுக்குக் கல்வி உதவித்தொகையாக 17,60,000-ரூபாய்கான காசோலையை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.


கோவை: கோவையில் தனியார் நிறுவனம் சார்பில் அரசுப் பள்ளியில் பயிலும் ஏழ்மை நிலையில் உள்ள 352 மாணவிகளுக்குக் கல்வி உதவித்தொகையாக 17,60,000 ரூபாய்கான காசோலையை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

கேரள மாநிலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தனியார் கோல்டு நிறுவனம் (மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ்) இயங்கி வருகின்றது. இதன் கோவை கிளை சார்பில் கோவை ஆர்எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், முதற்கட்டமாக, கோவை மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயிலும் ஏழை மாணவிகள் 352 பேருக்கு, 17,60,000 க்கான காசோலைகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.



தொடர்ந்து, 1200 மாணவிகளுக்கு 60 லட்சம் மதிப்பிலான காசோலைகள் வழங்கப்பட உள்ளது.



இந்த நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...