நாட்டுக்காக அர்ப்பணிக்கும் ராணுவத்தின் முதல் படியான தேசிய மாணவர் படையைக் கவுரவிக்கும் விதமாக இன்று கோவை கிணத்துக்கடவு ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில் தேசிய மாணவர் படை தினம் இன்று கொண்டாடப்பட்டது.
கோவை: நாட்டுக்காக அர்ப்பணிக்கும் ராணுவத்தின் முதல் படியான தேசிய மாணவர் படையைக் கவுரவிக்கும் விதமாக இன்று கோவை கிணத்துக்கடவு ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில் தேசிய மாணவர் படை தினம் இன்று கொண்டாடப்பட்டது.
முன்னதாக சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள வந்த கோவை ஆபீசர் கமெண்டிங் லெப்ட் கர்னல் மணி சர்மாவுக்கு தேசிய மாணவர் படை மாணவ- மாணவிகள் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் வளர்ச்சிக்காகவும் பாடுபடுவோம் என உறுதிமொழியை ஏற்றுத் தேசிய மாணவர் படை தின விழாவைத் தொடங்கினர்.
ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியின் இயக்குனர் ராஜராம், கல்லூரி முதல்வர் டாக்டர் சுதாமோகன்ராம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கல்லூரியின் டீன் கருப்புசாமி வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஆபீசர் கமெண்டிங் லெப்ட் கர்னல் மணிசர்மா சிறப்புரையாற்றினார். இதையடுத்து தேசிய மாணவர் படை மாணவ -மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கோவை பகுதியைச் சேர்ந்த பல்வேறு கல்லூரிகளின் தேசிய மாணவர் படை மாணவ-மாணவிகளும் கமண்டோக்களும் கலந்து கொண்டனர்.
முன்னதாக சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள வந்த கோவை ஆபீசர் கமெண்டிங் லெப்ட் கர்னல் மணி சர்மாவுக்கு தேசிய மாணவர் படை மாணவ- மாணவிகள் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் வளர்ச்சிக்காகவும் பாடுபடுவோம் என உறுதிமொழியை ஏற்றுத் தேசிய மாணவர் படை தின விழாவைத் தொடங்கினர்.
ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியின் இயக்குனர் ராஜராம், கல்லூரி முதல்வர் டாக்டர் சுதாமோகன்ராம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கல்லூரியின் டீன் கருப்புசாமி வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஆபீசர் கமெண்டிங் லெப்ட் கர்னல் மணிசர்மா சிறப்புரையாற்றினார். இதையடுத்து தேசிய மாணவர் படை மாணவ -மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கோவை பகுதியைச் சேர்ந்த பல்வேறு கல்லூரிகளின் தேசிய மாணவர் படை மாணவ-மாணவிகளும் கமண்டோக்களும் கலந்து கொண்டனர்.