திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனைவியுடன் தீக்குளிக்க முயன்ற ஆட்டோ டிரைவர்..!

கொடுத்த பணத்தைத் திருப்பி தராமல் ஏமாற்றும் உறவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனைவியுடன் தீக்குளிக்க முயன்ற ஆட்டோ டிரைவரால் பரபரப்பு நிலவியது.


திருப்பூர்: கொடுத்த பணத்தைத் திருப்பி தராமல் ஏமாற்றும் உறவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனைவியுடன் தீக்குளிக்க முயன்ற ஆட்டோ டிரைவரால் பரபரப்பு நிலவியது.

திருப்பூர் ஐய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வரதன் (35) இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. வரதன் கோவில்வழி பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார்.

இதனிடையே, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வரதனின் உறவினரான முத்துசாமி என்பவர் தொழில் துவங்குவதற்காக ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளார். இதையடுத்து, தனது குழந்தைகளின் நகையை வங்கியில் அடமானம் வைத்து வரதன் ஒரு லட்சம் ரூபாயை முத்துசாமிக்குக் கொடுத்துள்ளார்.

பணத்தை வாங்கிக் கொண்ட முத்துசாமி அதன்பிறகு வங்கியில் ஒரு மாதம் கூட தவணை தொகையைக் கட்டவில்லை. இதுகுறித்து, வரதன் முத்துச்சாமி இடம் கேட்டபோது, தான் பணமே வாங்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் எங்கு வேண்டுமானாலும் சென்று புகார் கொடு தன்னை எதுவும் செய்யமுடியாது என தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் தன்னை தாக்கியதாக வரதனின் மீது முத்துச்சாமி போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதனால், மிகுந்த மன வேதனை அடைந்த வரதன் தனது மனைவி சத்யாவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று வந்தார். தான் மறைத்து வைத்திருந்த டீசல் கேனை எடுத்து மேலே ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.



ஆனால், அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் அவரிடம் இருந்து டீசல் கேனை பிடுங்கி விசாரணை நடத்தினர்.



பின்னர், இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...