கொடுத்த பணத்தைத் திருப்பி தராமல் ஏமாற்றும் உறவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனைவியுடன் தீக்குளிக்க முயன்ற ஆட்டோ டிரைவரால் பரபரப்பு நிலவியது.
திருப்பூர்: கொடுத்த பணத்தைத் திருப்பி தராமல் ஏமாற்றும் உறவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனைவியுடன் தீக்குளிக்க முயன்ற ஆட்டோ டிரைவரால் பரபரப்பு நிலவியது.
திருப்பூர் ஐய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வரதன் (35) இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. வரதன் கோவில்வழி பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார்.
இதனிடையே, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வரதனின் உறவினரான முத்துசாமி என்பவர் தொழில் துவங்குவதற்காக ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளார். இதையடுத்து, தனது குழந்தைகளின் நகையை வங்கியில் அடமானம் வைத்து வரதன் ஒரு லட்சம் ரூபாயை முத்துசாமிக்குக் கொடுத்துள்ளார்.
பணத்தை வாங்கிக் கொண்ட முத்துசாமி அதன்பிறகு வங்கியில் ஒரு மாதம் கூட தவணை தொகையைக் கட்டவில்லை. இதுகுறித்து, வரதன் முத்துச்சாமி இடம் கேட்டபோது, தான் பணமே வாங்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் எங்கு வேண்டுமானாலும் சென்று புகார் கொடு தன்னை எதுவும் செய்யமுடியாது என தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் தன்னை தாக்கியதாக வரதனின் மீது முத்துச்சாமி போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதனால், மிகுந்த மன வேதனை அடைந்த வரதன் தனது மனைவி சத்யாவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று வந்தார். தான் மறைத்து வைத்திருந்த டீசல் கேனை எடுத்து மேலே ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

ஆனால், அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் அவரிடம் இருந்து டீசல் கேனை பிடுங்கி விசாரணை நடத்தினர்.

பின்னர், இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
திருப்பூர் ஐய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வரதன் (35) இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. வரதன் கோவில்வழி பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார்.
இதனிடையே, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வரதனின் உறவினரான முத்துசாமி என்பவர் தொழில் துவங்குவதற்காக ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளார். இதையடுத்து, தனது குழந்தைகளின் நகையை வங்கியில் அடமானம் வைத்து வரதன் ஒரு லட்சம் ரூபாயை முத்துசாமிக்குக் கொடுத்துள்ளார்.
பணத்தை வாங்கிக் கொண்ட முத்துசாமி அதன்பிறகு வங்கியில் ஒரு மாதம் கூட தவணை தொகையைக் கட்டவில்லை. இதுகுறித்து, வரதன் முத்துச்சாமி இடம் கேட்டபோது, தான் பணமே வாங்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் எங்கு வேண்டுமானாலும் சென்று புகார் கொடு தன்னை எதுவும் செய்யமுடியாது என தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் தன்னை தாக்கியதாக வரதனின் மீது முத்துச்சாமி போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதனால், மிகுந்த மன வேதனை அடைந்த வரதன் தனது மனைவி சத்யாவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று வந்தார். தான் மறைத்து வைத்திருந்த டீசல் கேனை எடுத்து மேலே ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
ஆனால், அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் அவரிடம் இருந்து டீசல் கேனை பிடுங்கி விசாரணை நடத்தினர்.
பின்னர், இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.