கேரளாவிலிருந்து பறவைக்காய்ச்சல் தமிழகத்திற்குப் பரவும் அபாயம் உள்ளதால், மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் எடுத்து எல்லைப்பகுதிகளில் முகாம்கள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி பொள்ளாச்சி வழியாகக் கேரளா செல்லும் எல்லைகளில் கால்நடைத் துறை அதிகாரிகள் முகாம் அமைக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள பொள்ளாச்சி வழியாகக் கேரளாவுக்குச் செல்ல கோபாலபுரம், மீனாட்சி புரம் நடுப்புணி உள்ளிட்ட வழித்தடங்கள் உள்ளன. இந்த வழித்தடம் வழியாகக் காய்கறிகள், கறிக்கோழிகள், முட்டை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கேரளாவுக்கு வியாபாரிகள் கொண்டு செல்கின்றனர்.
குறிப்பாக நாமக்கல் மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து, கறிக்கோழிகள் கேரளாவுக்கு அதிகளவில் கொண்டு சொல்லப்படுகிறது. இந்நிலையில் கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியில் பறவை காய்ச்சல் காரணமாக, பல ஆயிரக்கணக்கான வாத்துகள் உயிரிழந்துள்ளன.
தமிழக கேரள எல்லைப் பகுதியான பொள்ளாச்சி வழியாகக் கால்நடை போக்குவரத்து அதிகளவில் இருப்பதால், தமிழகத்திலும் பறவைக்காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. எனவே கோவை மாவட்டத்தில் குறிப்பாகப் பொள்ளாச்சி வழியாகக் கேரளா செல்லும் எல்லைப்பகுதிகளில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், முகாம்கள் அமைக்கப்பட்டு கேரளாவிலிருந்து வரும் வாகனங்களுக்குக் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், கறிக்கோழிகள் கொண்டு செல்லும் முக்கிய வழித்தடமாக நடுப்புணி பகுதியில் இதுவரை கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் முகாம் அமைக்கப்படாமல் உள்ளது. கேரளாவிலிருந்து பறவைக்காய்ச்சல் தமிழகத்திற்குப் பரவும் அபாயம் உள்ளதால், மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் எடுத்து எல்லைப்பகுதிகளில் முகாம்கள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள பொள்ளாச்சி வழியாகக் கேரளாவுக்குச் செல்ல கோபாலபுரம், மீனாட்சி புரம் நடுப்புணி உள்ளிட்ட வழித்தடங்கள் உள்ளன. இந்த வழித்தடம் வழியாகக் காய்கறிகள், கறிக்கோழிகள், முட்டை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கேரளாவுக்கு வியாபாரிகள் கொண்டு செல்கின்றனர்.
குறிப்பாக நாமக்கல் மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து, கறிக்கோழிகள் கேரளாவுக்கு அதிகளவில் கொண்டு சொல்லப்படுகிறது. இந்நிலையில் கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியில் பறவை காய்ச்சல் காரணமாக, பல ஆயிரக்கணக்கான வாத்துகள் உயிரிழந்துள்ளன.
தமிழக கேரள எல்லைப் பகுதியான பொள்ளாச்சி வழியாகக் கால்நடை போக்குவரத்து அதிகளவில் இருப்பதால், தமிழகத்திலும் பறவைக்காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. எனவே கோவை மாவட்டத்தில் குறிப்பாகப் பொள்ளாச்சி வழியாகக் கேரளா செல்லும் எல்லைப்பகுதிகளில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், முகாம்கள் அமைக்கப்பட்டு கேரளாவிலிருந்து வரும் வாகனங்களுக்குக் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், கறிக்கோழிகள் கொண்டு செல்லும் முக்கிய வழித்தடமாக நடுப்புணி பகுதியில் இதுவரை கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் முகாம் அமைக்கப்படாமல் உள்ளது. கேரளாவிலிருந்து பறவைக்காய்ச்சல் தமிழகத்திற்குப் பரவும் அபாயம் உள்ளதால், மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் எடுத்து எல்லைப்பகுதிகளில் முகாம்கள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.