கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி: கால்நடைத்துறை அதிகாரிகள் முகாம் அமைக்க கோரிக்கை..!

கேரளாவிலிருந்து பறவைக்காய்ச்சல் தமிழகத்திற்குப் பரவும் அபாயம் உள்ளதால், மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் எடுத்து எல்லைப்பகுதிகளில் முகாம்கள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி பொள்ளாச்சி வழியாகக் கேரளா செல்லும் எல்லைகளில் கால்நடைத் துறை அதிகாரிகள் முகாம் அமைக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள பொள்ளாச்சி வழியாகக் கேரளாவுக்குச் செல்ல கோபாலபுரம், மீனாட்சி புரம் நடுப்புணி உள்ளிட்ட வழித்தடங்கள் உள்ளன. இந்த வழித்தடம் வழியாகக் காய்கறிகள், கறிக்கோழிகள், முட்டை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கேரளாவுக்கு வியாபாரிகள் கொண்டு செல்கின்றனர்.

குறிப்பாக நாமக்கல் மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து, கறிக்கோழிகள் கேரளாவுக்கு அதிகளவில் கொண்டு சொல்லப்படுகிறது. இந்நிலையில் கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியில் பறவை காய்ச்சல் காரணமாக, பல ஆயிரக்கணக்கான வாத்துகள் உயிரிழந்துள்ளன.

தமிழக கேரள எல்லைப் பகுதியான பொள்ளாச்சி வழியாகக் கால்நடை போக்குவரத்து அதிகளவில் இருப்பதால், தமிழகத்திலும் பறவைக்காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. எனவே கோவை மாவட்டத்தில் குறிப்பாகப் பொள்ளாச்சி வழியாகக் கேரளா செல்லும் எல்லைப்பகுதிகளில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், முகாம்கள் அமைக்கப்பட்டு கேரளாவிலிருந்து வரும் வாகனங்களுக்குக் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஆனால், கறிக்கோழிகள் கொண்டு செல்லும் முக்கிய வழித்தடமாக நடுப்புணி பகுதியில் இதுவரை கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் முகாம் அமைக்கப்படாமல் உள்ளது. கேரளாவிலிருந்து பறவைக்காய்ச்சல் தமிழகத்திற்குப் பரவும் அபாயம் உள்ளதால், மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் எடுத்து எல்லைப்பகுதிகளில் முகாம்கள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...