முறைகேடு புகார் எதிரொலி: கோவை பெரியமாரியம்மன் கோவில், இனி அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில்..!

நன்கொடை முறைகேடு புகாரின் பேரில், பெரிய மாரியம்மன் கோவிலில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். பின்னர், கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஆணையாளர் உத்தரவிட்டார்.


கோவை: கோவை ஹேப் காலேஜ் பகுதியில் தனியார் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வந்த பெரிய மாரியம்மன் கோவிலில், வரவு செலவுகளை சரியாக காட்டவில்லை என புகார் எழுந்தது. புகாரை தொடர்ந்து, கோவில் நிர்வாகிகள் மாற்றப்பட்டன.

கோவில் நிர்வாகிகள் மாற்றப்பட்ட பின்பும், இந்த ஆண்டும் கோவிலின் கணக்குகள் சரிவர காட்டவில்லை என கூறப்படுகிறது. மேலும், கோவிலுக்கு பக்தர்கள் வழங்கிய 70 பவுன் நகை மற்றும் 10 லட்ச ரூபாய் ஆகியவை குறித்த விவரமும் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

தொடர், முறைகேடு நடைபெற்று வருவதால், பெரிய மாரியம்மன் கோவில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும், என கன்ஸ்யூமர் வாய்ஸ் நிர்வாகிகளுக்கு பொதுமக்கள் கடிதம் அனுப்பினர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, பெரிய மாரியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஆணையாளர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறைக்கு அலுவலர்கள், உமாமகேஸ்வரி, கனகராஜ், முருகேசன் உள்ளிட்ட அலுவலர்கள் இந்த கோவிலில் உள்ள சாமி சிலைகளை கணக்கெடுத்து உண்டியலுக்கு சீல் வைத்தனர். மேலும், அங்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...