நன்கொடை முறைகேடு புகாரின் பேரில், பெரிய மாரியம்மன் கோவிலில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். பின்னர், கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஆணையாளர் உத்தரவிட்டார்.
கோவை: கோவை ஹேப் காலேஜ் பகுதியில் தனியார் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வந்த பெரிய மாரியம்மன் கோவிலில், வரவு செலவுகளை சரியாக காட்டவில்லை என புகார் எழுந்தது. புகாரை தொடர்ந்து, கோவில் நிர்வாகிகள் மாற்றப்பட்டன.
கோவில் நிர்வாகிகள் மாற்றப்பட்ட பின்பும், இந்த ஆண்டும் கோவிலின் கணக்குகள் சரிவர காட்டவில்லை என கூறப்படுகிறது. மேலும், கோவிலுக்கு பக்தர்கள் வழங்கிய 70 பவுன் நகை மற்றும் 10 லட்ச ரூபாய் ஆகியவை குறித்த விவரமும் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
தொடர், முறைகேடு நடைபெற்று வருவதால், பெரிய மாரியம்மன் கோவில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும், என கன்ஸ்யூமர் வாய்ஸ் நிர்வாகிகளுக்கு பொதுமக்கள் கடிதம் அனுப்பினர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, பெரிய மாரியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஆணையாளர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறைக்கு அலுவலர்கள், உமாமகேஸ்வரி, கனகராஜ், முருகேசன் உள்ளிட்ட அலுவலர்கள் இந்த கோவிலில் உள்ள சாமி சிலைகளை கணக்கெடுத்து உண்டியலுக்கு சீல் வைத்தனர். மேலும், அங்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவில் நிர்வாகிகள் மாற்றப்பட்ட பின்பும், இந்த ஆண்டும் கோவிலின் கணக்குகள் சரிவர காட்டவில்லை என கூறப்படுகிறது. மேலும், கோவிலுக்கு பக்தர்கள் வழங்கிய 70 பவுன் நகை மற்றும் 10 லட்ச ரூபாய் ஆகியவை குறித்த விவரமும் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
தொடர், முறைகேடு நடைபெற்று வருவதால், பெரிய மாரியம்மன் கோவில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும், என கன்ஸ்யூமர் வாய்ஸ் நிர்வாகிகளுக்கு பொதுமக்கள் கடிதம் அனுப்பினர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, பெரிய மாரியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஆணையாளர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறைக்கு அலுவலர்கள், உமாமகேஸ்வரி, கனகராஜ், முருகேசன் உள்ளிட்ட அலுவலர்கள் இந்த கோவிலில் உள்ள சாமி சிலைகளை கணக்கெடுத்து உண்டியலுக்கு சீல் வைத்தனர். மேலும், அங்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.