கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் மக்கள் தொடர்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் கலந்துகொண்டு 342 பயனாளிகளுக்கு 78 லட்சம் மதிப்புள்ள இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்கள், மற்றும் விபத்து காப்பீட்டுத் தொகை தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாய இடுபொருள்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது, கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது வரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
அனைத்து இடங்களிலும் வீடு வீடாகச் சென்று டெங்கு கொசுக்கள் உள்ளதைக் கண்டறிந்து அதை ஒழிப்பதற்காக 4,000 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு தீவிர நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்கள் கண்டறியப்பட்டு அதிக கவனம் செலுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கேரள மாநிலத்தில் பரவி வரும் பறவை காய்ச்சல் நமது மாவட்டத்தில் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக 11 சோதனைச் சாவடிகளிலும் மாநில எல்லை தாண்டி வரும் வாகனங்களைக் கண்காணித்து கால்நடை பராமரிப்புத் துறை மூலம் மருத்துவக் குழு அமைக்கப்பட்டு பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
முன்னதாக மகளிர் சுய உதவிக் குழு, தோட்டக்கலைத் துறை, வேளாண் துறை, சுகாதாரத்துறை, சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார்.
பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் மக்கள் தொடர்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் கலந்துகொண்டு 342 பயனாளிகளுக்கு 78 லட்சம் மதிப்புள்ள இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்கள், மற்றும் விபத்து காப்பீட்டுத் தொகை தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாய இடுபொருள்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது, கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது வரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
அனைத்து இடங்களிலும் வீடு வீடாகச் சென்று டெங்கு கொசுக்கள் உள்ளதைக் கண்டறிந்து அதை ஒழிப்பதற்காக 4,000 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு தீவிர நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்கள் கண்டறியப்பட்டு அதிக கவனம் செலுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கேரள மாநிலத்தில் பரவி வரும் பறவை காய்ச்சல் நமது மாவட்டத்தில் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக 11 சோதனைச் சாவடிகளிலும் மாநில எல்லை தாண்டி வரும் வாகனங்களைக் கண்காணித்து கால்நடை பராமரிப்புத் துறை மூலம் மருத்துவக் குழு அமைக்கப்பட்டு பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
முன்னதாக மகளிர் சுய உதவிக் குழு, தோட்டக்கலைத் துறை, வேளாண் துறை, சுகாதாரத்துறை, சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார்.