கோவை சரவணம்பட்டியில் மகளிர் விடுதியில் விபச்சாரம்-மூவர் கைது.!

பெண்கள் விடுதியில் விபச்சாரம் நடப்பதாக, சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு வந்த ரகசியத் தகவலையடுத்து, திடீர் சோதனையில் விடுதியில் பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்திய சம்பவம் குறித்து 3-பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: பெண்கள் விடுதியில் விபச்சாரம் நடப்பதாக, சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு வந்த ரகசியத் தகவலையடுத்து, திடீர் சோதனையில் விடுதியில் பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்திய சம்பவம் குறித்து 3-பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை சரவணம்பட்டி அடுத்த சின்னவேடம்பட்டி துடியலூர் சாலை சந்திப்பு அருகே ஐஸ்வர்யா மகளிர் விடுதி உள்ளது. இந்த விடுதியைத் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சிக்கந்தர் பாட்சா என்பவர் நடத்திவருகிறார்.

இந்நிலையில் பெண்கள் விடுதியில் விபச்சாரம் நடப்பதாக, சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு வந்த ரகசியத் தகவலையடுத்து, சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் கந்தசாமி தலைமையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில், ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த புத்தேஷ்வர் (28) கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (28) ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கௌதம் (22) ஆகியோர் விடுதியில் பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

இதனையடுத்து, மூவரையும் கைது செய்த சரவணம்பட்டி காவல்துறையினர் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது பெண், டெல்லியைச் சேர்ந்த 26 வயது பெண் மற்றும் 23 வயது பெண் ஆகிய மூவரையும் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...