கோவை சரவணம்பட்டியில் மகளிர் விடுதியில் விபச்சாரம்-மூவர் கைது.!

பெண்கள் விடுதியில் விபச்சாரம் நடப்பதாக, சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு வந்த ரகசியத் தகவலையடுத்து, திடீர் சோதனையில் விடுதியில் பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்திய சம்பவம் குறித்து 3-பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: பெண்கள் விடுதியில் விபச்சாரம் நடப்பதாக, சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு வந்த ரகசியத் தகவலையடுத்து, திடீர் சோதனையில் விடுதியில் பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்திய சம்பவம் குறித்து 3-பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை சரவணம்பட்டி அடுத்த சின்னவேடம்பட்டி துடியலூர் சாலை சந்திப்பு அருகே ஐஸ்வர்யா மகளிர் விடுதி உள்ளது. இந்த விடுதியைத் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சிக்கந்தர் பாட்சா என்பவர் நடத்திவருகிறார்.

இந்நிலையில் பெண்கள் விடுதியில் விபச்சாரம் நடப்பதாக, சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு வந்த ரகசியத் தகவலையடுத்து, சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் கந்தசாமி தலைமையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில், ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த புத்தேஷ்வர் (28) கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (28) ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கௌதம் (22) ஆகியோர் விடுதியில் பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

இதனையடுத்து, மூவரையும் கைது செய்த சரவணம்பட்டி காவல்துறையினர் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது பெண், டெல்லியைச் சேர்ந்த 26 வயது பெண் மற்றும் 23 வயது பெண் ஆகிய மூவரையும் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...