கோவையில் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட விபத்தில் மூதாட்டி உட்பட 3 பேர் பலி..!

புகாரின் பேரில் கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட விபத்தில் மூதாட்டி உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் மதுகுமார் (19). இவர் கோவை சூலூரை அடுத்த அப்பநாயக்கன்பட்டியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், இவருடைய நண்பர் பரமோத்குமார் மற்றும் பரத்துடன் பாப்பம்பட்டி பகுதியில் இருந்து இடையர்பாளையம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது, அந்த வழியாக வந்த மினி வேன் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளில் மோதியது.

இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த பரமோத்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடைய நண்பர் பரத் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல, கோவை கீரணத்தம் ஆதி திராவிடர் காலனியைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் கார்த்திக் (30). கூலித் தொழிலாளியான இவர் சரவணம்பட்டியில் இருந்து கீரணத்தம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்குள்ள மயானம் அருகே சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து, கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், கோவை பீளமேடு லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் ஜெயபால் (49). இவர் நேற்று தனது தாய் ரங்காத்தாளுடன் சிங்காநல்லூர் அருகே காமராஜர் சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் அவரது தாய்க்கு தலையில் பலத்த காயம் அடைந்தது.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து, அவரது மகன் ஜெயபால் அளித்த புகாரின் பேரில் கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...