முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புறநோயாளிகள் சிகிச்சையைப் புறக்கணித்து, கோவை அரசு மருத்துவமனை டீன் அலுவலகம் முன்பு முதுநிலை மருத்துவ மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
கோவை: முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புறநோயாளிகள் சிகிச்சையைப் புறக்கணித்து, கோவை அரசு மருத்துவமனை டீன் அலுவலகம் முன்பு முதுநிலை மருத்துவ மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

சென்னை, மதுரை உள்ளிட்ட மருத்துவ மனைகளில் மருத்துவர்களாக பணியாற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் தற்போது கலந்தாய்வை நடத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவ மாணவர்கள் கூறியதாவது:-
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வழக்கமாக ஜனவரி மாதம் நடத்தப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணத்தால் செப்டம்பர் மாதம் நீட் தேர்வு நடைபெற்றது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான இட ஒதுக்கீடு மற்றும் ஓபிசி இட ஒதுக்கீடு குறித்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அதனால், மூன்று மாதங்கள் ஆகியும் இன்னும் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்றும், நீட் தேர்வு எழுதிய 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்தாய்வுக்காக காத்திருக்கின்றனர்.
கலந்தாய்வு நடைபெற்று இருந்தால் தமிழகத்தில் 2,500-போ் உட்பட இந்தியா முழுவதும் 40- ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் முதுநிலை படிப்புகளில் சேர்ந்திருப்பார்கள் என்றும், முதுநிலை படிக்கும் மாணவர்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான பல்வேறு சிகிச்சைகளை வழங்குவார்கள்.

ஆகவே, இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை முதலாம் ஆண்டு மாணவர்கள் வராததால், ஏற்கெனவே இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்குப் பணிச் சுமையும், மன உளைச்சலும் அதிகமாகியுள்ளது. எனவே, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வை உடனே நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
சென்னை, மதுரை உள்ளிட்ட மருத்துவ மனைகளில் மருத்துவர்களாக பணியாற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் தற்போது கலந்தாய்வை நடத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவ மாணவர்கள் கூறியதாவது:-
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வழக்கமாக ஜனவரி மாதம் நடத்தப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணத்தால் செப்டம்பர் மாதம் நீட் தேர்வு நடைபெற்றது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான இட ஒதுக்கீடு மற்றும் ஓபிசி இட ஒதுக்கீடு குறித்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அதனால், மூன்று மாதங்கள் ஆகியும் இன்னும் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்றும், நீட் தேர்வு எழுதிய 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்தாய்வுக்காக காத்திருக்கின்றனர்.
கலந்தாய்வு நடைபெற்று இருந்தால் தமிழகத்தில் 2,500-போ் உட்பட இந்தியா முழுவதும் 40- ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் முதுநிலை படிப்புகளில் சேர்ந்திருப்பார்கள் என்றும், முதுநிலை படிக்கும் மாணவர்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான பல்வேறு சிகிச்சைகளை வழங்குவார்கள்.
ஆகவே, இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை முதலாம் ஆண்டு மாணவர்கள் வராததால், ஏற்கெனவே இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்குப் பணிச் சுமையும், மன உளைச்சலும் அதிகமாகியுள்ளது. எனவே, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வை உடனே நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.