கோவையில் செல்போன்களை விற்று ரூ.2 லட்சம் கையாடல் செய்த மேனேஜர் மீது வழக்குப்பதிவு..!

புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் ராஜா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


கோவை: கோவை சாய்பாபா காலனியில் செல்போன்களை விற்று 2 லட்சம் ரூபாய் கையாடல் செய்த மேனேஜர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர் சாலை பகுதியில் ஜியோ நிறுவனத்திற்கு சொந்தமான ஷோரூம் உள்ளது. இந்த கிளையின் மேனேஜராக கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் பணிபுரிந்து வந்தார்.

அதேபோல, கோவையில் உள்ள ஷோரூம்களுக்கு ஏரியா மேனேஜராக கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த ஜவகர் (39) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த ஆண்டு நிறுவனத்தில் இருந்த செல்போன்கள் விற்பனை குறித்த வரவு செலவுகளை ஏரியா மேனேஜர் ஜவகர் சரிபார்த்த போது, சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ஷோரூமில் பத்து செல்போன்கள் விற்பனை செய்தது குறித்து தொகை கணக்கில் வரவு செய்யப்படாமல் இருந்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஜவகர் விசாரணை நடத்திய போது, சாய்பாபா கிளை மேலாளர் ராஜா பத்து செல்போன்களை மோசடியாக விற்று பணத்தை கையாடல் செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, சுமார் 2 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பத்து செல்போன்களை கையாடல் செய்து, விற்று பணத்தை கையாடல் செய்ததாக, ஜவகர் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் போலீசார் ராஜா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...