கோவையில் செல்போன்களை விற்று ரூ.2 லட்சம் கையாடல் செய்த மேனேஜர் மீது வழக்குப்பதிவு..!

புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் ராஜா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


கோவை: கோவை சாய்பாபா காலனியில் செல்போன்களை விற்று 2 லட்சம் ரூபாய் கையாடல் செய்த மேனேஜர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர் சாலை பகுதியில் ஜியோ நிறுவனத்திற்கு சொந்தமான ஷோரூம் உள்ளது. இந்த கிளையின் மேனேஜராக கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் பணிபுரிந்து வந்தார்.

அதேபோல, கோவையில் உள்ள ஷோரூம்களுக்கு ஏரியா மேனேஜராக கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த ஜவகர் (39) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த ஆண்டு நிறுவனத்தில் இருந்த செல்போன்கள் விற்பனை குறித்த வரவு செலவுகளை ஏரியா மேனேஜர் ஜவகர் சரிபார்த்த போது, சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ஷோரூமில் பத்து செல்போன்கள் விற்பனை செய்தது குறித்து தொகை கணக்கில் வரவு செய்யப்படாமல் இருந்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஜவகர் விசாரணை நடத்திய போது, சாய்பாபா கிளை மேலாளர் ராஜா பத்து செல்போன்களை மோசடியாக விற்று பணத்தை கையாடல் செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, சுமார் 2 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பத்து செல்போன்களை கையாடல் செய்து, விற்று பணத்தை கையாடல் செய்ததாக, ஜவகர் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் போலீசார் ராஜா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...