ஷார்ஜாவில் சர்க்கரை நோயால் தவிக்கும் தமிழர்கள்; கோவையில் இருந்து தினமும் பாகற்காய் அதிகளவு ஏற்றுமதி..!

ஒரு டன் காய்கறி புக்கிங் செய்யப்பட்டால் அதில் 500 கிலோ பாகற்காய் மட்டுமே புக்கிங் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.


கோவை: ஷார்ஜாவில் சர்க்கரை நோயால் தவிக்கும் தமிழர்களுக்காக கோவையிலிருந்து தினமும் பாகற்காய் மற்றும் கோவக்காய் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான ஷார்ஜாவில் தொழில், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்தியர்கள் பலர் வசித்து வருகின்றனர்.

ஷார்ஜாவில் சர்க்கரை நோயால் அதிக தமிழர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அதன் காரணமாக கோவையிலிருந்து தினமும் ஏற்றுமதி செய்யப்படும் கார்கோ பட்டியலில் பாகற்காய், கோவக்காய் அதிக பங்களிப்பு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஏர்போர்ட் வட்டாரங்கள் கூறியதாவது,

'கோவை - ஷார்ஜா இடையே 'ஏர் அரேபியா' நிறுவனம் சார்பில் தற்போது தினசரி விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் 150க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இந்த விமானம் புறப்பட்டுச் செல்கிறது.

கார்கோ பொருத்தவரை 2 டன் முதல் மூன்று அல்லது மூன்றரை டன் வரை புக்கிங் செய்யப்பட்டு இந்த விமானத்தில் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

இன்ஜினியரிங் பொருட்கள், காய்கறிகள் மற்றும் பல்வேறு உணவு பொருட்கள் வழக்கமாக புக்கிங் செய்யப்படும்.

அதிலும் குறிப்பாக காய்கறியை பொருத்தவரை பாகற்காய், கோவக்காய் வாழைக்காய், சவுச்சவ், உருளைக்கிழங்கு, கீரை வகைகள், சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் அதிகம் புக்கிங் செய்யப்படும்.

அதிலும் குறிப்பாக பாகற்காய்க்கு அதிக மவுசு தொடர்ந்து உள்ளது. ஷார்ஜாவில் உள்ள தமிழர்களில் பலர், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதே இதற்கு காரணமாகும்.

உதாரணத்திற்கு ஒரு டன் காய்கறி புக்கிங் செய்யப்பட்டால் அதில் 500 கிலோ பாகற்காய் மட்டுமே புக்கிங் செய்யப்படும். அந்த அளவுக்கு ஷார்ஜாவில் பாகற்காய்க்கு அதிக தேவை உள்ளது. இந்த ஒரு காய்கறியை மட்டும் எவ்வளவு விலைக்கு விற்றாலும் அவற்றை வாங்க அங்குள்ள தமிழர்கள் தயாராக உள்ளனர்.'

இவ்வாறு ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...