ஷார்ஜாவில் சர்க்கரை நோயால் தவிக்கும் தமிழர்கள்; கோவையில் இருந்து தினமும் பாகற்காய் அதிகளவு ஏற்றுமதி..!

ஒரு டன் காய்கறி புக்கிங் செய்யப்பட்டால் அதில் 500 கிலோ பாகற்காய் மட்டுமே புக்கிங் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.


கோவை: ஷார்ஜாவில் சர்க்கரை நோயால் தவிக்கும் தமிழர்களுக்காக கோவையிலிருந்து தினமும் பாகற்காய் மற்றும் கோவக்காய் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான ஷார்ஜாவில் தொழில், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்தியர்கள் பலர் வசித்து வருகின்றனர்.

ஷார்ஜாவில் சர்க்கரை நோயால் அதிக தமிழர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அதன் காரணமாக கோவையிலிருந்து தினமும் ஏற்றுமதி செய்யப்படும் கார்கோ பட்டியலில் பாகற்காய், கோவக்காய் அதிக பங்களிப்பு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஏர்போர்ட் வட்டாரங்கள் கூறியதாவது,

'கோவை - ஷார்ஜா இடையே 'ஏர் அரேபியா' நிறுவனம் சார்பில் தற்போது தினசரி விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் 150க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இந்த விமானம் புறப்பட்டுச் செல்கிறது.

கார்கோ பொருத்தவரை 2 டன் முதல் மூன்று அல்லது மூன்றரை டன் வரை புக்கிங் செய்யப்பட்டு இந்த விமானத்தில் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

இன்ஜினியரிங் பொருட்கள், காய்கறிகள் மற்றும் பல்வேறு உணவு பொருட்கள் வழக்கமாக புக்கிங் செய்யப்படும்.

அதிலும் குறிப்பாக காய்கறியை பொருத்தவரை பாகற்காய், கோவக்காய் வாழைக்காய், சவுச்சவ், உருளைக்கிழங்கு, கீரை வகைகள், சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் அதிகம் புக்கிங் செய்யப்படும்.

அதிலும் குறிப்பாக பாகற்காய்க்கு அதிக மவுசு தொடர்ந்து உள்ளது. ஷார்ஜாவில் உள்ள தமிழர்களில் பலர், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதே இதற்கு காரணமாகும்.

உதாரணத்திற்கு ஒரு டன் காய்கறி புக்கிங் செய்யப்பட்டால் அதில் 500 கிலோ பாகற்காய் மட்டுமே புக்கிங் செய்யப்படும். அந்த அளவுக்கு ஷார்ஜாவில் பாகற்காய்க்கு அதிக தேவை உள்ளது. இந்த ஒரு காய்கறியை மட்டும் எவ்வளவு விலைக்கு விற்றாலும் அவற்றை வாங்க அங்குள்ள தமிழர்கள் தயாராக உள்ளனர்.'

இவ்வாறு ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...