ஷார்ஜாவில் சர்க்கரை நோயால் தவிக்கும் தமிழர்கள்; கோவையில் இருந்து தினமும் பாகற்காய் அதிகளவு ஏற்றுமதி..!

ஒரு டன் காய்கறி புக்கிங் செய்யப்பட்டால் அதில் 500 கிலோ பாகற்காய் மட்டுமே புக்கிங் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.


கோவை: ஷார்ஜாவில் சர்க்கரை நோயால் தவிக்கும் தமிழர்களுக்காக கோவையிலிருந்து தினமும் பாகற்காய் மற்றும் கோவக்காய் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான ஷார்ஜாவில் தொழில், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்தியர்கள் பலர் வசித்து வருகின்றனர்.

ஷார்ஜாவில் சர்க்கரை நோயால் அதிக தமிழர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அதன் காரணமாக கோவையிலிருந்து தினமும் ஏற்றுமதி செய்யப்படும் கார்கோ பட்டியலில் பாகற்காய், கோவக்காய் அதிக பங்களிப்பு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஏர்போர்ட் வட்டாரங்கள் கூறியதாவது,

'கோவை - ஷார்ஜா இடையே 'ஏர் அரேபியா' நிறுவனம் சார்பில் தற்போது தினசரி விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் 150க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இந்த விமானம் புறப்பட்டுச் செல்கிறது.

கார்கோ பொருத்தவரை 2 டன் முதல் மூன்று அல்லது மூன்றரை டன் வரை புக்கிங் செய்யப்பட்டு இந்த விமானத்தில் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

இன்ஜினியரிங் பொருட்கள், காய்கறிகள் மற்றும் பல்வேறு உணவு பொருட்கள் வழக்கமாக புக்கிங் செய்யப்படும்.

அதிலும் குறிப்பாக காய்கறியை பொருத்தவரை பாகற்காய், கோவக்காய் வாழைக்காய், சவுச்சவ், உருளைக்கிழங்கு, கீரை வகைகள், சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் அதிகம் புக்கிங் செய்யப்படும்.

அதிலும் குறிப்பாக பாகற்காய்க்கு அதிக மவுசு தொடர்ந்து உள்ளது. ஷார்ஜாவில் உள்ள தமிழர்களில் பலர், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதே இதற்கு காரணமாகும்.

உதாரணத்திற்கு ஒரு டன் காய்கறி புக்கிங் செய்யப்பட்டால் அதில் 500 கிலோ பாகற்காய் மட்டுமே புக்கிங் செய்யப்படும். அந்த அளவுக்கு ஷார்ஜாவில் பாகற்காய்க்கு அதிக தேவை உள்ளது. இந்த ஒரு காய்கறியை மட்டும் எவ்வளவு விலைக்கு விற்றாலும் அவற்றை வாங்க அங்குள்ள தமிழர்கள் தயாராக உள்ளனர்.'

இவ்வாறு ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...