அதேபோல, பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் புத்தகங்களை வெயிலில் காயவைத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் இன்று பள்ளி செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
கோவை: ஆனைமலை அடுத்த அங்கலக்குறிச்சி பகுதியில் இரவு பெய்த கனமழையால் வீடுகளின் சுவர் இடிந்து மின் கம்பம் சாய்ந்ததால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை அங்கலக்குறிச்சி இந்திரா நகர் பகுதியில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக கழிவு நீர் செல்லும் வழித்தடங்கள் மண் சரிந்து அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக அப்பகுதியில் நீர் தேங்கியது.
மேலும், தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மழைநீர் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் வீடுகளின் சுவர்கள் இடிந்து சேதம் அடைந்தது. மேலும் மின்கம்பம் சாய்ந்து வீட்டின் மதில் சுவர் மேல் விழுந்தது.
இதையடுத்து, உடனடியாக மின்சார வாரிய அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் அப்பகுதியில் உள்ள மக்கள் அருகிலுள்ள உறவினர் வீட்டிற்கு தஞ்சமடைந்தனர். தற்போது வீட்டுக்குள் புகுந்த நீரை வெளியேற்ற முயன்று வருகின்றனர்.
அதேபோல, பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் புத்தகங்களை வெயிலில் காயவைத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் இன்று பள்ளி செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பத்தை சரி செய்யும் பணியிலும், ஊராட்சி ஊழியர்கள் கழிவுநீர் வழித்தடத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை அங்கலக்குறிச்சி இந்திரா நகர் பகுதியில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக கழிவு நீர் செல்லும் வழித்தடங்கள் மண் சரிந்து அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக அப்பகுதியில் நீர் தேங்கியது.
மேலும், தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மழைநீர் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் வீடுகளின் சுவர்கள் இடிந்து சேதம் அடைந்தது. மேலும் மின்கம்பம் சாய்ந்து வீட்டின் மதில் சுவர் மேல் விழுந்தது.
இதையடுத்து, உடனடியாக மின்சார வாரிய அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் அப்பகுதியில் உள்ள மக்கள் அருகிலுள்ள உறவினர் வீட்டிற்கு தஞ்சமடைந்தனர். தற்போது வீட்டுக்குள் புகுந்த நீரை வெளியேற்ற முயன்று வருகின்றனர்.
அதேபோல, பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் புத்தகங்களை வெயிலில் காயவைத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் இன்று பள்ளி செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பத்தை சரி செய்யும் பணியிலும், ஊராட்சி ஊழியர்கள் கழிவுநீர் வழித்தடத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.