ஆனைமலை அருகே இரவு பெய்த கனமழையால் வீடுகளின் சுவர் இடிந்து விபத்து - மின் கம்பம் சாய்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

அதேபோல, பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் புத்தகங்களை வெயிலில் காயவைத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் இன்று பள்ளி செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.


கோவை: ஆனைமலை அடுத்த அங்கலக்குறிச்சி பகுதியில் இரவு பெய்த கனமழையால் வீடுகளின் சுவர் இடிந்து மின் கம்பம் சாய்ந்ததால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை அங்கலக்குறிச்சி இந்திரா நகர் பகுதியில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக கழிவு நீர் செல்லும் வழித்தடங்கள் மண் சரிந்து அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக அப்பகுதியில் நீர் தேங்கியது.

மேலும், தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மழைநீர் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் வீடுகளின் சுவர்கள் இடிந்து சேதம் அடைந்தது. மேலும் மின்கம்பம் சாய்ந்து வீட்டின் மதில் சுவர் மேல் விழுந்தது.

இதையடுத்து, உடனடியாக மின்சார வாரிய அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் அப்பகுதியில் உள்ள மக்கள் அருகிலுள்ள உறவினர் வீட்டிற்கு தஞ்சமடைந்தனர். தற்போது வீட்டுக்குள் புகுந்த நீரை வெளியேற்ற முயன்று வருகின்றனர்.

அதேபோல, பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் புத்தகங்களை வெயிலில் காயவைத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் இன்று பள்ளி செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பத்தை சரி செய்யும் பணியிலும், ஊராட்சி ஊழியர்கள் கழிவுநீர் வழித்தடத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...