ஆனைமலை அருகே இரவு பெய்த கனமழையால் வீடுகளின் சுவர் இடிந்து விபத்து - மின் கம்பம் சாய்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

அதேபோல, பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் புத்தகங்களை வெயிலில் காயவைத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் இன்று பள்ளி செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.


கோவை: ஆனைமலை அடுத்த அங்கலக்குறிச்சி பகுதியில் இரவு பெய்த கனமழையால் வீடுகளின் சுவர் இடிந்து மின் கம்பம் சாய்ந்ததால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை அங்கலக்குறிச்சி இந்திரா நகர் பகுதியில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக கழிவு நீர் செல்லும் வழித்தடங்கள் மண் சரிந்து அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக அப்பகுதியில் நீர் தேங்கியது.

மேலும், தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மழைநீர் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் வீடுகளின் சுவர்கள் இடிந்து சேதம் அடைந்தது. மேலும் மின்கம்பம் சாய்ந்து வீட்டின் மதில் சுவர் மேல் விழுந்தது.

இதையடுத்து, உடனடியாக மின்சார வாரிய அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் அப்பகுதியில் உள்ள மக்கள் அருகிலுள்ள உறவினர் வீட்டிற்கு தஞ்சமடைந்தனர். தற்போது வீட்டுக்குள் புகுந்த நீரை வெளியேற்ற முயன்று வருகின்றனர்.

அதேபோல, பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் புத்தகங்களை வெயிலில் காயவைத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் இன்று பள்ளி செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பத்தை சரி செய்யும் பணியிலும், ஊராட்சி ஊழியர்கள் கழிவுநீர் வழித்தடத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...