31-லட்சம் மதிப்புள்ள தூய தங்கம் கடத்தல்..! கோவை விமான நிலையத்தில் பரபரப்பு..!

கோவை விமான நிலையத்தில் ரூ.31.68 லட்சம் மதிப்புள்ள 640.110 கிராம் அளவிலான 24 காரட் தூய தங்கம் கோவை விமானப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை விமான நிலையத்தில் ரூ.31.68 லட்சம் மதிப்புள்ள 640.110 கிராம் அளவிலான 24 காரட் தூய தங்கம் கோவை விமானப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் கடத்தப்படுவது குறித்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், 28.11.2021 அன்று ஏர் அரேபியா விமானம் ஜி9-413 மூலம் ஷார்ஜாவிலிருந்து வந்த ஆண் பயணி ஒருவரை, கோவையின் விமான நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மூன்று ஓவல் வடிவ கருப்பு நிற பாலித்தீன் பாக்கெட்டுகளில் வைத்து சிக்கலான தங்க பேஸ்ட்டை மலக்குடலில் மறைத்து வைத்திருப்பதை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, மருத்துவர்கள் மூலம் மூன்று ஓவல் வடிவ பாக்கெட்டுகளையும் கோவை விமான நிலையத்தின் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர். ஆய்வு செய்ததில் அது ரூ.31.68 லட்சம் மதிப்புள்ள 640.110 கிராம் அளவிலான 24 காரட் தங்கம் என கண்டறியப்பட்டது. மேலும் சுங்கச் சட்டம், 1962-ன் கீழ் ஒட்டுமொத்த தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் தங்கத்தை கடத்தி வந்த பயணி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...