கோவை விமான நிலையத்தில் ரூ.31.68 லட்சம் மதிப்புள்ள 640.110 கிராம் அளவிலான 24 காரட் தூய தங்கம் கோவை விமானப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை விமான நிலையத்தில் ரூ.31.68 லட்சம் மதிப்புள்ள 640.110 கிராம் அளவிலான 24 காரட் தூய தங்கம் கோவை விமானப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் கடத்தப்படுவது குறித்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், 28.11.2021 அன்று ஏர் அரேபியா விமானம் ஜி9-413 மூலம் ஷார்ஜாவிலிருந்து வந்த ஆண் பயணி ஒருவரை, கோவையின் விமான நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மூன்று ஓவல் வடிவ கருப்பு நிற பாலித்தீன் பாக்கெட்டுகளில் வைத்து சிக்கலான தங்க பேஸ்ட்டை மலக்குடலில் மறைத்து வைத்திருப்பதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, மருத்துவர்கள் மூலம் மூன்று ஓவல் வடிவ பாக்கெட்டுகளையும் கோவை விமான நிலையத்தின் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர். ஆய்வு செய்ததில் அது ரூ.31.68 லட்சம் மதிப்புள்ள 640.110 கிராம் அளவிலான 24 காரட் தங்கம் என கண்டறியப்பட்டது. மேலும் சுங்கச் சட்டம், 1962-ன் கீழ் ஒட்டுமொத்த தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் தங்கத்தை கடத்தி வந்த பயணி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
தங்கம் கடத்தப்படுவது குறித்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், 28.11.2021 அன்று ஏர் அரேபியா விமானம் ஜி9-413 மூலம் ஷார்ஜாவிலிருந்து வந்த ஆண் பயணி ஒருவரை, கோவையின் விமான நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மூன்று ஓவல் வடிவ கருப்பு நிற பாலித்தீன் பாக்கெட்டுகளில் வைத்து சிக்கலான தங்க பேஸ்ட்டை மலக்குடலில் மறைத்து வைத்திருப்பதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, மருத்துவர்கள் மூலம் மூன்று ஓவல் வடிவ பாக்கெட்டுகளையும் கோவை விமான நிலையத்தின் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர். ஆய்வு செய்ததில் அது ரூ.31.68 லட்சம் மதிப்புள்ள 640.110 கிராம் அளவிலான 24 காரட் தங்கம் என கண்டறியப்பட்டது. மேலும் சுங்கச் சட்டம், 1962-ன் கீழ் ஒட்டுமொத்த தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் தங்கத்தை கடத்தி வந்த பயணி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.