30-ஆண்டுகளுக்கும் மேலாக அரசு புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கோவை: 30-ஆண்டுகளுக்கும் மேலாக அரசு புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியிருப்பதாவது:-
தமிழகம் மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் புறம்போக்கு இடங்களில் கடந்த 30-ஆண்டுகளுக்கும் மேலாகக் கிராம பஞ்சாயத்து, பேரூராட்சி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வரி ரசீது போடப்பட்டு, நீண்ட காலமாகக் குடியிருக்கும் மக்களுக்குப் பட்டா வழங்க வேண்டும். பல வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதில் வருவாய்த்துறை மூலம் குடியிருக்கும் மக்களுக்கு மின் இணைப்பு பெறத் தடை இல்லாத சான்று வழங்க வேண்டும்.
இதன் மூலம் பெரும்பகுதியான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மின் இணைப்பு பெறுவதற்கு வாய்ப்பாக அமையும். சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் அரசு அதிகாரிகள் செய்யும் நல்ல நிகழ்வுகளுக்கு இடையூர் செய்வதாகத் தெரிய வருகிறது. தவறான தகவல்களைத் தரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியிருப்பதாவது:-
தமிழகம் மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் புறம்போக்கு இடங்களில் கடந்த 30-ஆண்டுகளுக்கும் மேலாகக் கிராம பஞ்சாயத்து, பேரூராட்சி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வரி ரசீது போடப்பட்டு, நீண்ட காலமாகக் குடியிருக்கும் மக்களுக்குப் பட்டா வழங்க வேண்டும். பல வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதில் வருவாய்த்துறை மூலம் குடியிருக்கும் மக்களுக்கு மின் இணைப்பு பெறத் தடை இல்லாத சான்று வழங்க வேண்டும்.
இதன் மூலம் பெரும்பகுதியான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மின் இணைப்பு பெறுவதற்கு வாய்ப்பாக அமையும். சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் அரசு அதிகாரிகள் செய்யும் நல்ல நிகழ்வுகளுக்கு இடையூர் செய்வதாகத் தெரிய வருகிறது. தவறான தகவல்களைத் தரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.