கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவின் பேரில், மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.59 பகுதியில் உள்ள தெரு விளக்கு எரிவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவின் பேரில், மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.59 பகுதியில் உள்ள தெரு விளக்கு எரிவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வு செய்யப்பட்டதில் வார்டு எண்.59-ல் 5 தெருவிளக்குகள் கணபதி நகர் பகுதியில் கடந்த 18 நாட்களாக எரியாமல் உள்ளதினால் பொதுமக்கள் வீதிகளில் சென்றுவர மிகவும் இடையூறாக உள்ளது. இதனால் சமூகவிரோத செயல்கள் நிகழும் சூழ்நிலையில் உள்ளது.
எனவே, இப்பணியினை ஒப்பந்தம் எடுத்துள்ள கே.சி.பி. இன்ஜினியாஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினருக்குப் பழுதை சரிசெய்து தெருவிளக்குகள் எரியச்செய்திடக் கோரி கடிதம் அனுப்பப்பட்டது.
மேலும், ஒப்பந்தப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி ஐந்து தெருவிளக்குகள் எரியாத காரணத்தினால் அபராத தொகை நாள் ஒன்றுக்கு ரூ.25.00 வீதம் 18 நாட்களுக்கு ரூ.2250/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஆய்வு செய்யப்பட்டதில் வார்டு எண்.59-ல் 5 தெருவிளக்குகள் கணபதி நகர் பகுதியில் கடந்த 18 நாட்களாக எரியாமல் உள்ளதினால் பொதுமக்கள் வீதிகளில் சென்றுவர மிகவும் இடையூறாக உள்ளது. இதனால் சமூகவிரோத செயல்கள் நிகழும் சூழ்நிலையில் உள்ளது.
எனவே, இப்பணியினை ஒப்பந்தம் எடுத்துள்ள கே.சி.பி. இன்ஜினியாஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினருக்குப் பழுதை சரிசெய்து தெருவிளக்குகள் எரியச்செய்திடக் கோரி கடிதம் அனுப்பப்பட்டது.
மேலும், ஒப்பந்தப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி ஐந்து தெருவிளக்குகள் எரியாத காரணத்தினால் அபராத தொகை நாள் ஒன்றுக்கு ரூ.25.00 வீதம் 18 நாட்களுக்கு ரூ.2250/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.