தெரு விளக்கு எரிவது தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ ஆய்வு..!

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா உத்தரவின் பேரில்‌, மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.59 பகுதியில்‌ உள்ள தெரு விளக்கு எரிவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா உத்தரவின் பேரில்‌, மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.59 பகுதியில்‌ உள்ள தெரு விளக்கு எரிவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வு செய்யப்பட்டதில்‌ வார்டு எண்‌.59-ல்‌ 5 தெருவிளக்குகள்‌ கணபதி நகர்‌ பகுதியில்‌ கடந்த 18 நாட்களாக எரியாமல்‌ உள்ளதினால்‌ பொதுமக்கள்‌ வீதிகளில்‌ சென்றுவர மிகவும்‌ இடையூறாக உள்ளது. இதனால்‌ சமூகவிரோத செயல்கள்‌ நிகழும்‌ சூழ்நிலையில்‌ உள்ளது.

எனவே, இப்பணியினை ஒப்பந்தம்‌ எடுத்துள்ள கே.சி.பி. இன்ஜினியாஸ்‌ பிரைவேட்‌ லிமிடெட்‌ நிறுவனத்தினருக்குப் பழுதை சரிசெய்து தெருவிளக்குகள்‌ எரியச்செய்திடக் கோரி கடிதம்‌ அனுப்பப்பட்டது.

மேலும்‌, ஒப்பந்தப்பத்திரத்தில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளபடி ஐந்து தெருவிளக்குகள்‌ எரியாத காரணத்தினால்‌ அபராத தொகை நாள்‌ ஒன்றுக்கு ரூ.25.00 வீதம்‌ 18 நாட்களுக்கு ரூ.2250/- அபராதம்‌ விதிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்‌.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...