ஊரக வளர்ச்சித் துறை உதவி செயற்பொறியாளர், ஒப்பந்ததாரரிடம் ரூபாய் 9-ஆயிரம் லஞ்சம் வாங்கிய நிலையில், 7-ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10-ஆயிரம் அபராதம் வழங்கி ஊட்டி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை: ஊரக வளர்ச்சித் துறை உதவி செயற்பொறியாளர், ஒப்பந்ததாரரிடம் ரூபாய் 9-ஆயிரம் லஞ்சம் வாங்கிய நிலையில், 7-ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10-ஆயிரம் அபராதம் வழங்கி ஊட்டி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஊட்டி ஊரக வளர்ச்சித் துறையில் உதவி செயற்பொறியாளர் ஆறுமுகசாமி என்பவர் பணியாற்றி வந்தார். கூடலூர் அருகே உள்ள சேரம்பாடியில் கடந்த 2008-ஆம் ஆண்டு எம் ஜி ஆர் ஒய் திட்டத்தின்கீழ் நூலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டுமான பணிகளை ஒப்பந்ததாரரிடம் சந்திரபோஸ் மேற்கொண்டு வந்தார்.
பணிகள் முடிவடைந்தவுடன் அதற்கான சான்றிதழ் மற்றும் அதற்குண்டான விடுவிப்பதற்காக ஆறுமுகசாமி ஒப்பந்ததாரரிடம் ரூபாய் 9-ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து ஒப்பந்ததாரர் சந்திரபோஸ் கடந்த 2008 -செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி ஆறுமுகசாமிக்கு ரூபாய் 9-ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறை அவரை கையும் களவுமாகப் பிடித்தனர்.
இதையடுத்து ஆறுமுகசாமி மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு ஊட்டியில் உள்ள சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீதர் நூலக கட்டிடக் கட்டுமான பணி முடிந்து அதற்கு மேல் தொகை வழங்க 9000 லஞ்சம் வாங்கிய ஆறுமுகசாமிக்கு 7 ஆ
ஊட்டி ஊரக வளர்ச்சித் துறையில் உதவி செயற்பொறியாளர் ஆறுமுகசாமி என்பவர் பணியாற்றி வந்தார். கூடலூர் அருகே உள்ள சேரம்பாடியில் கடந்த 2008-ஆம் ஆண்டு எம் ஜி ஆர் ஒய் திட்டத்தின்கீழ் நூலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டுமான பணிகளை ஒப்பந்ததாரரிடம் சந்திரபோஸ் மேற்கொண்டு வந்தார்.
பணிகள் முடிவடைந்தவுடன் அதற்கான சான்றிதழ் மற்றும் அதற்குண்டான விடுவிப்பதற்காக ஆறுமுகசாமி ஒப்பந்ததாரரிடம் ரூபாய் 9-ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து ஒப்பந்ததாரர் சந்திரபோஸ் கடந்த 2008 -செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி ஆறுமுகசாமிக்கு ரூபாய் 9-ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறை அவரை கையும் களவுமாகப் பிடித்தனர்.
இதையடுத்து ஆறுமுகசாமி மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு ஊட்டியில் உள்ள சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீதர் நூலக கட்டிடக் கட்டுமான பணி முடிந்து அதற்கு மேல் தொகை வழங்க 9000 லஞ்சம் வாங்கிய ஆறுமுகசாமிக்கு 7 ஆ