வால்பாறை அருகே தேயிலைத் தோட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் 40க்கு மேற்பட்ட காட்டு யானைகள் - மக்கள் அச்சம்..!

காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத்துறையினர் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: வால்பாறை அருகே 40க்கு மேற்பட்ட காட்டு யானைகள் தேயிலைத் தோட்ட பகுதிகளில் சுற்றித்திரிவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கேரளா வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் தமிழகத்தில் தேயிலைத் தோட்டத்திற்குள் நுழைந்து குடியிருப்பு பகுதிகளில் உள்ள கடைகள், சத்துணவு மையங்கள் போன்றவற்றை உணவு தேடி இடித்து சேதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், கடந்த மூன்று தினங்களாக கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள எஸ்டேட் பகுதியான வாகமலை சங்கிலி ரோடு, பண்ணிமேடு போன்ற பகுதி எஸ்டேட் பகுதிகளில் வனப்பகுதியில் இருந்து சுமார் 40க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வெளியேறி தேயிலைத் தோட்டத்தில் சுற்றித் திரிந்துவிட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் செல்கின்றது.



இந்த நிலையில், இன்று காலை தொழிலாளிகள் தேயிலை பறிக்கும் பணிக்காக தேயிலைத் தோட்டத்திற்கு சென்ற போது, யானைகளை கண்டு அச்சமடைந்து வேறு இடத்திற்கு தேயிலை பறிக்கும் பணிக்காக அனுப்பப்பட்டனர். இதனால் சிறிது நேரம் தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டது.



இதனிடையே, காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத்துறையினர் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...