கோவை மருதமலை கோவில் அடிவாரத்தில் முடிகாணிக்கை செலுத்த தனி மண்டபம்..!

முடி காணிக்கை செலுத்தும் மண்டபம், 10 குளியலறை மற்றும் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.72 லட்சத்தில் திட்ட மதிப்பீடு செய்து, ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.


கோவை: கோவை மருதமலை அடிவாரத்தில், முடி காணிக்கை மண்டபம் கட்ட, திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

கோவை வடவள்ளி அருகே உள்ள மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இக்கோவில் படிக்கட்டு பாதையில், முடி காணிக்கை செலுத்தும் இடம் உள்ளது. இவ்விடம் குறுகலாக இருப்பதால், விசேஷ நாட்களில் பக்தர்கள் நிற்க இடமில்லாமல், படிக்கட்டில் நிற்கும் நிலை ஏற்படுகிறது.

இதனால் மருதமலை அடிவாரத்தில், கோவிலுக்குச் சொந்தமான 93 சென்ட் இடத்தில், முடிகாணிக்கை மண்டபம் கட்ட, மண் பரிசோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து, அறநிலையத்துறை துணை ஆணையர் (பொ) விமலா கூறுகையில், "மருதமலை அடிவாரத்தில், கோவிலுக்குச் சொந்தமான இடத்தில், முடி காணிக்கை செலுத்தும் மண்டபம், 10 குளியலறை மற்றும் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.72 லட்சத்தில் திட்ட மதிப்பீடு செய்து, ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்த பின், டெண்டர் விடப்படும்," என்று தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...