கோவை மருதமலை கோவில் அடிவாரத்தில் முடிகாணிக்கை செலுத்த தனி மண்டபம்..!

முடி காணிக்கை செலுத்தும் மண்டபம், 10 குளியலறை மற்றும் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.72 லட்சத்தில் திட்ட மதிப்பீடு செய்து, ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.


கோவை: கோவை மருதமலை அடிவாரத்தில், முடி காணிக்கை மண்டபம் கட்ட, திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

கோவை வடவள்ளி அருகே உள்ள மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இக்கோவில் படிக்கட்டு பாதையில், முடி காணிக்கை செலுத்தும் இடம் உள்ளது. இவ்விடம் குறுகலாக இருப்பதால், விசேஷ நாட்களில் பக்தர்கள் நிற்க இடமில்லாமல், படிக்கட்டில் நிற்கும் நிலை ஏற்படுகிறது.

இதனால் மருதமலை அடிவாரத்தில், கோவிலுக்குச் சொந்தமான 93 சென்ட் இடத்தில், முடிகாணிக்கை மண்டபம் கட்ட, மண் பரிசோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து, அறநிலையத்துறை துணை ஆணையர் (பொ) விமலா கூறுகையில், "மருதமலை அடிவாரத்தில், கோவிலுக்குச் சொந்தமான இடத்தில், முடி காணிக்கை செலுத்தும் மண்டபம், 10 குளியலறை மற்றும் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.72 லட்சத்தில் திட்ட மதிப்பீடு செய்து, ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்த பின், டெண்டர் விடப்படும்," என்று தெரிவித்தார்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...