குடிநீர் இணைப்பு வழங்கக்கோரி பொள்ளாச்சியில் பொதுமக்கள் போராட்டம்..!

பொள்ளாச்சி அருகே குடிநீர் இணைப்பு வழங்கக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே குடிநீர் இணைப்பு வழங்கக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட சோமந்துரைசித்தூர் பஞ்சாயத்தில் உள்ள குடியிருப்புகளில் ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ், குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் பணம் கொடுத்து குடிநீர் குழாய்கள் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு, குடிநீர் வசதி வழங்கவில்லை என்று கூறியும், குழாய் பதிப்பதற்காகச் சாலையில் தோண்டப்பட்ட குழிகள் சீரமைக்கப்படாததால் விபத்துகள் ஏற்படுவதாகக் கூறியும், பொதுமக்கள் நேற்று ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், ஆனைமலை ஒன்றியம் சோமந்துறை சித்தூர் கிராமத்தில், புதிய குடிநீர் இணைப்புக்கு வைப்புத்தொகை மற்றும் குடிநீர் கட்டணம், மக்களின் பங்களிப்பு தொகை என மூன்று 3,680 ரூபாய் பெற்றுக்கொண்டு, தற்போது ஒரு சில நபர்களுக்கு மட்டும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

ரோட்டில் குழிதோண்டி, மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நின்று மேடு பள்ளமாக ரோடு இருப்பதால், பலரும் விழுந்து காயங்கள் ஏற்பட்டு வருகிறது. வைப்புத்தொகை கொடுத்த அனைத்து பயனாளிகளுக்கு உடனடியாக இணைப்பு வழங்கி, குடிதண்ணீர் வழங்கி, சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் உடனடியாக சாலைகளைச் சீரமைக்க வேண்டும், என்று தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...