குடிநீர் இணைப்பு வழங்கக்கோரி பொள்ளாச்சியில் பொதுமக்கள் போராட்டம்..!

பொள்ளாச்சி அருகே குடிநீர் இணைப்பு வழங்கக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே குடிநீர் இணைப்பு வழங்கக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட சோமந்துரைசித்தூர் பஞ்சாயத்தில் உள்ள குடியிருப்புகளில் ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ், குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் பணம் கொடுத்து குடிநீர் குழாய்கள் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு, குடிநீர் வசதி வழங்கவில்லை என்று கூறியும், குழாய் பதிப்பதற்காகச் சாலையில் தோண்டப்பட்ட குழிகள் சீரமைக்கப்படாததால் விபத்துகள் ஏற்படுவதாகக் கூறியும், பொதுமக்கள் நேற்று ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், ஆனைமலை ஒன்றியம் சோமந்துறை சித்தூர் கிராமத்தில், புதிய குடிநீர் இணைப்புக்கு வைப்புத்தொகை மற்றும் குடிநீர் கட்டணம், மக்களின் பங்களிப்பு தொகை என மூன்று 3,680 ரூபாய் பெற்றுக்கொண்டு, தற்போது ஒரு சில நபர்களுக்கு மட்டும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

ரோட்டில் குழிதோண்டி, மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நின்று மேடு பள்ளமாக ரோடு இருப்பதால், பலரும் விழுந்து காயங்கள் ஏற்பட்டு வருகிறது. வைப்புத்தொகை கொடுத்த அனைத்து பயனாளிகளுக்கு உடனடியாக இணைப்பு வழங்கி, குடிதண்ணீர் வழங்கி, சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் உடனடியாக சாலைகளைச் சீரமைக்க வேண்டும், என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...