குடிநீர் இணைப்பு வழங்கக்கோரி பொள்ளாச்சியில் பொதுமக்கள் போராட்டம்..!

பொள்ளாச்சி அருகே குடிநீர் இணைப்பு வழங்கக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே குடிநீர் இணைப்பு வழங்கக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட சோமந்துரைசித்தூர் பஞ்சாயத்தில் உள்ள குடியிருப்புகளில் ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ், குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் பணம் கொடுத்து குடிநீர் குழாய்கள் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு, குடிநீர் வசதி வழங்கவில்லை என்று கூறியும், குழாய் பதிப்பதற்காகச் சாலையில் தோண்டப்பட்ட குழிகள் சீரமைக்கப்படாததால் விபத்துகள் ஏற்படுவதாகக் கூறியும், பொதுமக்கள் நேற்று ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், ஆனைமலை ஒன்றியம் சோமந்துறை சித்தூர் கிராமத்தில், புதிய குடிநீர் இணைப்புக்கு வைப்புத்தொகை மற்றும் குடிநீர் கட்டணம், மக்களின் பங்களிப்பு தொகை என மூன்று 3,680 ரூபாய் பெற்றுக்கொண்டு, தற்போது ஒரு சில நபர்களுக்கு மட்டும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

ரோட்டில் குழிதோண்டி, மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நின்று மேடு பள்ளமாக ரோடு இருப்பதால், பலரும் விழுந்து காயங்கள் ஏற்பட்டு வருகிறது. வைப்புத்தொகை கொடுத்த அனைத்து பயனாளிகளுக்கு உடனடியாக இணைப்பு வழங்கி, குடிதண்ணீர் வழங்கி, சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் உடனடியாக சாலைகளைச் சீரமைக்க வேண்டும், என்று தெரிவித்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...