பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு கவியருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு..!

பொள்ளாச்சி அருகே உள்ள கவி அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாகச் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை வனத்துறை அறிவித்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள கவி அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாகச் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை வனத்துறை அறிவித்துள்ளனர்.

பொள்ளாச்சியை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி வால்பாறை சாலையில் அமைந்துள்ள சுற்றுலாத் தலமான கவி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அருவியில் கொட்டும் அதிகப்படியான வெள்ளத்தில் பாறைகள் மற்றும் மரக்கிளைகள் உருண்டு வரக்கூடும் என்பதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இதனால் பல பகுதிகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

காற்றழுத்த தாழ்வு நிலையால் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள நீர் பிடிப்பு பகுதிகளான அப்பர் ஆழியாறு, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆழியாறு அணையின் முழு கொள்ளளவான 120அடியை எட்டி உள்ளதால் அவ்வப்போது அணைக்கு வரும் நீர் வரத்திற்கு ஏற்றார் போல் உபரி நீர் வெளியேற்றப்படுவதால் ஆழியாறு ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

இதனால் தொடர்ச்சியாக ஆழியாறு ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் மக்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்கூட்டியே வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...