பாடந்துறை பகுதியில் ஊருக்குள் நுழைந்து வீடுகளை இடித்து சேதப்படுத்தி வரும் "அரிசி ராஜா" என்ற காட்டு யானையை கும்கி யானைகள் கொண்டு விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சேதமடைந்த வீடுகளை பார்வையிட்ட கூடலூர் கோட்டாட்சியர் கூறினார்.
நீலகிரி: கூடலூர் அருகே பாடந்துறை பகுதியில் ஊருக்குள் நுழைந்து வீடுகளை இடித்து சேதப்படுத்தி வரும் அரிசி ராஜா என்ற காட்டு யானையைக் கும்கி யானைகள் கொண்டு விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சேதமடைந்த வீடுகளை பார்வையிட்ட கூடலூர் கோட்டாட்சியர் கூறினார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பாடந்துறை பகுதியில் கடந்த சில நாட்களாக அரிசி ராஜா என்ற காட்டு யானை ஊருக்குள் நுழைந்து குடியிருப்புகளையும், விளைநிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் பாடந்துறை கைம கொல்லி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக ஒரே பகுதியில் அடுத்தடுத்து வீடுகளை இடித்து சேதப்படுத்தி வரும் அரிசி ராஜா என்ற காட்டு யானை வீடுகளை இடித்து சேதப்படுத்தி உணவுப் பொருட்களைச் சூறையாடிச் சென்றது.
இதனால் ஊருக்குள் அட்டகாசம் செய்து வரும் அரிசி ராஜா என்ற காட்டு யானையைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டுமென, அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்குக் கோரிக்கை வைத்து வந்தனர்.

இதனையடுத்து காட்டு யானை சேதப்படுத்திய வீடுகளை வனத்துறையினருடன் கூடலூர் கோட்டசியர் சரவண கண்ணன் மற்றும் கூடலூர் வட்டாட்சியர் கிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
ஊருக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தும் அரிசி ராஜ என்ற காட்டு யானையைக் கும்கி யானைகளைக் கொண்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபடுவார்கள் என அப்பகுதி மக்களிடம் அதிகாரிகள் கூறினர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பாடந்துறை பகுதியில் கடந்த சில நாட்களாக அரிசி ராஜா என்ற காட்டு யானை ஊருக்குள் நுழைந்து குடியிருப்புகளையும், விளைநிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் பாடந்துறை கைம கொல்லி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக ஒரே பகுதியில் அடுத்தடுத்து வீடுகளை இடித்து சேதப்படுத்தி வரும் அரிசி ராஜா என்ற காட்டு யானை வீடுகளை இடித்து சேதப்படுத்தி உணவுப் பொருட்களைச் சூறையாடிச் சென்றது.
இதனால் ஊருக்குள் அட்டகாசம் செய்து வரும் அரிசி ராஜா என்ற காட்டு யானையைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டுமென, அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்குக் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதனையடுத்து காட்டு யானை சேதப்படுத்திய வீடுகளை வனத்துறையினருடன் கூடலூர் கோட்டசியர் சரவண கண்ணன் மற்றும் கூடலூர் வட்டாட்சியர் கிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
ஊருக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தும் அரிசி ராஜ என்ற காட்டு யானையைக் கும்கி யானைகளைக் கொண்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபடுவார்கள் என அப்பகுதி மக்களிடம் அதிகாரிகள் கூறினர்.