'அரிசி ராஜா' வை விரட்ட கும்கி யானைகள் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் - கூடலூர் கோட்டாட்சியர்

பாடந்துறை பகுதியில் ஊருக்குள் நுழைந்து வீடுகளை இடித்து சேதப்படுத்தி வரும் "அரிசி ராஜா" என்ற காட்டு யானையை கும்கி யானைகள் கொண்டு விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சேதமடைந்த வீடுகளை பார்வையிட்ட கூடலூர் கோட்டாட்சியர் கூறினார்.


நீலகிரி: கூடலூர் அருகே பாடந்துறை பகுதியில் ஊருக்குள் நுழைந்து வீடுகளை இடித்து சேதப்படுத்தி வரும் அரிசி ராஜா என்ற காட்டு யானையைக் கும்கி யானைகள் கொண்டு விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சேதமடைந்த வீடுகளை பார்வையிட்ட கூடலூர் கோட்டாட்சியர் கூறினார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பாடந்துறை பகுதியில் கடந்த சில நாட்களாக அரிசி ராஜா என்ற காட்டு யானை ஊருக்குள் நுழைந்து குடியிருப்புகளையும், விளைநிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் பாடந்துறை கைம கொல்லி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக ஒரே பகுதியில் அடுத்தடுத்து வீடுகளை இடித்து சேதப்படுத்தி வரும் அரிசி ராஜா என்ற காட்டு யானை வீடுகளை இடித்து சேதப்படுத்தி உணவுப் பொருட்களைச் சூறையாடிச் சென்றது.

இதனால் ஊருக்குள் அட்டகாசம் செய்து வரும் அரிசி ராஜா என்ற காட்டு யானையைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டுமென, அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்குக் கோரிக்கை வைத்து வந்தனர்.



இதனையடுத்து காட்டு யானை சேதப்படுத்திய வீடுகளை வனத்துறையினருடன் கூடலூர் கோட்டசியர் சரவண கண்ணன் மற்றும் கூடலூர் வட்டாட்சியர் கிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

ஊருக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தும் அரிசி ராஜ என்ற காட்டு யானையைக் கும்கி யானைகளைக் கொண்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபடுவார்கள் என அப்பகுதி மக்களிடம் அதிகாரிகள் கூறினர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...