ஈமு கோழி பண்ணை நடத்தி மோசடி: 3-பேருக்கு 10-ஆண்டுகள் சிறை தண்டனை- கோவை நீதிமன்றம் தீர்ப்பு..!

ஈரோடு மாவட்டம் பகுதியில் ஈமு கோழிப்பண்ணை நடத்தி கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து மக்களிடம் மோசடிகளில் ஈடுபட்ட 3-நபர்களுக்கு 10-ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது.


கோவை: ஈரோடு மாவட்டம் பகுதியில் ஈமு கோழிப்பண்ணை நடத்தி கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து மக்களிடம் மோசடிகளில் ஈடுபட்ட 3-நபர்களுக்கு 10-ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. கட்ட தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் எனவும் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டம், ஈரோடு மேட்டூர் ரோட்டில் உள்ள ஹோட்டல் ரெசிடென்சி கட்டிடத்தில் இயங்கி வந்த ஜி 1 ஈழு பார்ம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைக் குருசாமி A1 முருகன், சுசிலா, லிங்குசாமி, ஆகியோர் பத்திரிகை மற்றும் ஊடகம் வாயிலாக விளம்பரம் செய்தனர்.

மேற்படி நிறுவனத்தில் உள்ள திட்டத்தை பற்றி முதலீட்டாளர்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி அவ்வாறு மக்களை கவர்ந்து இழுத்து குற்றவாளிகள் ஒப்பந்த காலம் முடிவதற்கு முன்பே பணத்தை திருப்பித் தராமல் 37-முதலீட்டாளர்களிடம் ஒரு கோடியே 2-லட்சத்து 7-ஆயிரத்து 500-பணத்தை ஏமாற்றி தலைமறைவாகி விட்டனர்.

எனவே பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட லிங்கம்பட்டி தெருவை சேர்ந்த லிங்கப்பா செட்டியார் மகன் குணசேகரன் என்பவர் 14.3.2012 -தேதி கொடுத்த புகாரின் பேரில் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சௌந்தரராஜன் என்பவரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வழக்கு கோவை கோர்ட்டில் வழக்கு நடந்து வந்த நிலையில், வழக்கை விசாரித்த டான் பிட் நீதிபதி ரவி இன்று A1கம்பெனி, A2குருசாமி 33, முருகன், ஆகியோருக்கு 10-ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் மூவருக்கும் சேர்த்து 72-லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியுள்ளார்.

சசிகலா விடுதலை, லிங்குசாமி 30.4.2012 - ஆம் தேதி இறந்து விட்டார். அபராதத் தொகையை கட்ட தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் A2 குருசாமி ஆஜராகவில்லை. தலைமறைவாக உள்ளார் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...