அணையிலிருந்து நாள்தோறும் 101.31 எம்.எல்.டி. குடிநீர் எடுக்கப்படுகிறது. இதில் கோவை மாநகராட்சியின் தேவைக்காக மட்டும் 96.50 எம்.எல்.டி. குடிநீர் எடுக்கப்படுவதாகக் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை: சிறுவாணி அணையின் நீர்மட்டம் 44-அடியாக உயர்ந்துள்ளது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 36-வார்டுகளுக்கும், வழியோர கிரமங்களுக்கும் குடிநீர் ஆதாரமாகச் சிறுவாணி அணை விளங்குகிறது. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதிகள் தமிழகத்தில் உள்ள போதிலும், அணை கேரளா மாநிலம் பாலக்காட்டில் அமைந்துள்ளது.
இந்த அணை 50 அடி உயரம் கொண்டது. இருப்பினும் அணையின் பாதுகாப்பிற்காக 45 அடி உயரம் வரை மட்டுமே குடிநீரைத் தேக்கக் கேரள அதிகாரிகள் அனுமதிக்கின்றனர்.
இந்நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் வடகிழக்கு பருவமழை நன்றாகப் பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகளுக்கு வரும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
இதனிடையே கடந்த மாதம் சிறுவாணி அணையின் நீர் மட்டம் 40-அடிக்கும் குறைவாக இருந்தது. தற்போது அணைக்கு அதிகளவு தண்ணீர் வருவதால் அணையின் நீர் மட்டம் கிடு, கிடுவென உயர்ந்து உள்ளது.
நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 44-அடி என்ற அளவில் உள்ளது. தற்போது அணையிலிருந்து நாள்தோறும் 101.31 எம்.எல்.டி. குடிநீர் எடுக்கப்படுகிறது. இதில் கோவை மாநகராட்சியின் தேவைக்காக மட்டும் 96.50 எம்.எல்.டி. குடிநீர் எடுக்கப்படுவதாகக் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 36-வார்டுகளுக்கும், வழியோர கிரமங்களுக்கும் குடிநீர் ஆதாரமாகச் சிறுவாணி அணை விளங்குகிறது. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதிகள் தமிழகத்தில் உள்ள போதிலும், அணை கேரளா மாநிலம் பாலக்காட்டில் அமைந்துள்ளது.
இந்த அணை 50 அடி உயரம் கொண்டது. இருப்பினும் அணையின் பாதுகாப்பிற்காக 45 அடி உயரம் வரை மட்டுமே குடிநீரைத் தேக்கக் கேரள அதிகாரிகள் அனுமதிக்கின்றனர்.
இந்நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் வடகிழக்கு பருவமழை நன்றாகப் பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகளுக்கு வரும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
இதனிடையே கடந்த மாதம் சிறுவாணி அணையின் நீர் மட்டம் 40-அடிக்கும் குறைவாக இருந்தது. தற்போது அணைக்கு அதிகளவு தண்ணீர் வருவதால் அணையின் நீர் மட்டம் கிடு, கிடுவென உயர்ந்து உள்ளது.
நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 44-அடி என்ற அளவில் உள்ளது. தற்போது அணையிலிருந்து நாள்தோறும் 101.31 எம்.எல்.டி. குடிநீர் எடுக்கப்படுகிறது. இதில் கோவை மாநகராட்சியின் தேவைக்காக மட்டும் 96.50 எம்.எல்.டி. குடிநீர் எடுக்கப்படுவதாகக் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.