சிறுவாணி அணை நீர்மட்டம் 44-அடியாக உயர்வு: மாநகராட்சி மூலம் 96.50-எம்.எல்.டி. குடிநீர் எடுக்கப்படுகிறது

அணையிலிருந்து நாள்தோறும் 101.31 எம்.எல்.டி. குடிநீர் எடுக்கப்படுகிறது. இதில் கோவை மாநகராட்சியின் தேவைக்காக மட்டும் 96.50 எம்.எல்.டி. குடிநீர் எடுக்கப்படுவதாகக் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை: சிறுவாணி அணையின் நீர்மட்டம் 44-அடியாக உயர்ந்துள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 36-வார்டுகளுக்கும், வழியோர கிரமங்களுக்கும் குடிநீர் ஆதாரமாகச் சிறுவாணி அணை விளங்குகிறது. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதிகள் தமிழகத்தில் உள்ள போதிலும், அணை கேரளா மாநிலம் பாலக்காட்டில் அமைந்துள்ளது.

இந்த அணை 50 அடி உயரம் கொண்டது. இருப்பினும் அணையின் பாதுகாப்பிற்காக 45 அடி உயரம் வரை மட்டுமே குடிநீரைத் தேக்கக் கேரள அதிகாரிகள் அனுமதிக்கின்றனர்.

இந்நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் வடகிழக்கு பருவமழை நன்றாகப் பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகளுக்கு வரும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

இதனிடையே கடந்த மாதம் சிறுவாணி அணையின் நீர் மட்டம் 40-அடிக்கும் குறைவாக இருந்தது. தற்போது அணைக்கு அதிகளவு தண்ணீர் வருவதால் அணையின் நீர் மட்டம் கிடு, கிடுவென உயர்ந்து உள்ளது.

நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 44-அடி என்ற அளவில் உள்ளது. தற்போது அணையிலிருந்து நாள்தோறும் 101.31 எம்.எல்.டி. குடிநீர் எடுக்கப்படுகிறது. இதில் கோவை மாநகராட்சியின் தேவைக்காக மட்டும் 96.50 எம்.எல்.டி. குடிநீர் எடுக்கப்படுவதாகக் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...