கோவை கிணத்துக்கடவு அருகே கார் மோதி முதியவர் பரிதாபமாக பலி..!

கிணத்துக்கடவு அருகே தனியார் கார் ஷோரூம் முன்பு நேற்று இரவு 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சாலையை கடக்க முயன்ற போது கார் மோதி உயிரிழந்தார்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கார் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள தனியார் கார் ஷோரூம் முன்பு நேற்று இரவு 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சாலையை கடக்க முயன்ற போது, பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி சென்ற கார் அந்த நபர் மீது மோதியது.



இதில் தலையில் பலத்த காயமடைந்த அந்த நபரை 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அந்த நபர் உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து சொலவம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்தில் உயிரிழந்த நபர் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், உயிரிழப்புக்கு காரணமான கார் ஓட்டுநர் மதுரை பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...