கோவை கிணத்துக்கடவு அருகே கார் மோதி முதியவர் பரிதாபமாக பலி..!

கிணத்துக்கடவு அருகே தனியார் கார் ஷோரூம் முன்பு நேற்று இரவு 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சாலையை கடக்க முயன்ற போது கார் மோதி உயிரிழந்தார்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கார் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள தனியார் கார் ஷோரூம் முன்பு நேற்று இரவு 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சாலையை கடக்க முயன்ற போது, பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி சென்ற கார் அந்த நபர் மீது மோதியது.



இதில் தலையில் பலத்த காயமடைந்த அந்த நபரை 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அந்த நபர் உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து சொலவம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்தில் உயிரிழந்த நபர் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், உயிரிழப்புக்கு காரணமான கார் ஓட்டுநர் மதுரை பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...