குடிநீர் விநியோகத்தை முறைப்படி தரக் கோரியும் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர்: திருப்பூரில் முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடிநீர் வழங்கல் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
திருப்பூர் மாநகர் பகுதிகளில் மொத்தம் 60 வார்டுகளில் கொண்டதாக இருக்கின்றது. இதில் 42 மற்றும் 43 ஆகிய இரண்டு வார்டுகளில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த பகுதிகளில் முறையாக குடிநீர் வினியோகம் செய்வதில்லை என குற்றம்சாட்டி இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடிநீர் வழங்கல் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
அந்த மனுவில், மழைக் காலங்களில்கூட இப்பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாகவும் இதனால் தண்ணீர் வரும் நாட்களில் வேலைக்குச் செல்வதை விட்டுவிட்டு தண்ணீர் பிடித்து வைக்கும் அவலம் இருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், குடிநீர் விநியோகத்தை முறைப்படி தரக் கோரியும் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கிட வேண்டும் என்றும் அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று குடிநீர் வழங்கல் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.
திருப்பூர் மாநகர் பகுதிகளில் மொத்தம் 60 வார்டுகளில் கொண்டதாக இருக்கின்றது. இதில் 42 மற்றும் 43 ஆகிய இரண்டு வார்டுகளில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த பகுதிகளில் முறையாக குடிநீர் வினியோகம் செய்வதில்லை என குற்றம்சாட்டி இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடிநீர் வழங்கல் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
அந்த மனுவில், மழைக் காலங்களில்கூட இப்பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாகவும் இதனால் தண்ணீர் வரும் நாட்களில் வேலைக்குச் செல்வதை விட்டுவிட்டு தண்ணீர் பிடித்து வைக்கும் அவலம் இருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், குடிநீர் விநியோகத்தை முறைப்படி தரக் கோரியும் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கிட வேண்டும் என்றும் அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று குடிநீர் வழங்கல் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.