கோவையில் ரயில் மோதி யானை உயிரிழந்த சம்பவம்: மாற்றுப் பாதையில் ரயில் வந்தது குறித்து தெற்கு ரயில்வே விளக்கம்..!

சரக்கு ரயில் 'பி' லைனில் இயக்கப்பட்டதாலேயே மங்களூர் - சென்னை ரயில் 'ஏ' லைனில் இயக்கப்பட்டது என தெரிவித்துள்ளது.


கோவை: கோவையில் சரக்கு ரயில் 'பி' லைனில் இயக்கப்பட்டதாலேயே யானைகள் மீது மோதிய ரயில், 'ஏ' லைனில் இயக்கப்பட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கோவை மதுக்கரை வனச்சரகம், நவக்கரை, மாவுதம்பதி மலை கிராமத்தில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற, மூன்று யானைகள் ரயில் மோதி உயிரிழந்தன.

கேரளாவில் இருந்து கோவைக்கு 'பி' லைனில், வரவேண்டிய மங்களூரு - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில், 'ஏ' லைனில் வந்ததாலேயே விபத்து நடந்ததாக பல்வேறு தரப்பிலும் குற்றம் சாட்டப்பட்டது.

இதை மறுத்துள்ள தெற்கு ரயில்வே நிர்வாகம், 'சரக்கு ரயில் 'பி' லைனில் இயக்கப்பட்டதாலேயே மங்களூர் - சென்னை ரயில் 'ஏ' லைனில் இயக்கப்பட்டது' என, தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

போத்தனுார் - பாலக்காடு இடையே உள்ள இரு ரயில் பாதைகளிலும், இரு மார்க்கத்திலும், ரயில்கள் இயக்கப்படும். போத்தனுார் பகுதி உயரமாக இருப்பதால், 'ஏ' லைனில் சரக்கு ரயில்களை இயக்குவது மிகவும் கடினம்.

இதையடுத்து ரயில்களின் தன்மை, அதில் உள்ள எடையின் அளவு ஆகியவற்றை கணக்கிட்டு அதற்கேற்றார் போல் ரயில் பாதைகளில் இயக்கப்படும். விபத்து நடந்த அன்று 'பி' லைனில் சரக்கு ரயில் இயக்கப்பட்டதால், 'ஏ' லைனில் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.

பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி, ரயில்வே நிர்வாகம் வனத்துறையுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...