இந்த தாக்குதலில் கெம்பட்டி காலணியைச் சேர்ந்த மகேஷ்வரன் மற்றும் கோட்டை மேட்டை சேர்ந்த முகமது நிஷார் ஆகிய 2 பேர் காயம் அடைந்தனர்.
கோவை: கோவையில் நடிகர் சிம்பு நடித்து திரையிடப்பட்ட தியேட்டரில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் காரணமாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவையில் உள்ள ஒரு தியேட்டரில் நடிகர் சிம்பு நடித்த மாநாடு என்ற படம் திரையிடப்பட்டு உள்ளது. அங்கு, நேற்று முன்தினம் இரவுக் காட்சியின்போது ரசிகர்களில் சிலர் கைதட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.
இதனால் இடையூறு ஏற்படுவதாக கூறி ஒரு தரப்பினருக்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த இரு கோஷ்டியினரும் திடீரென்று மோதலில் ஈடுபட்டனர். அவர்கள், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இந்த தாக்குதலில் கெம்பட்டி காலணியைச் சேர்ந்த மகேஷ்வரன் (24), கோட்டை மேட்டை சேர்ந்த முகமது நிஷார் (20) ஆகிய 2 பேர் காயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர், இது குறித்து தகவல் அறிந்த ரேஸ் கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருதரப்பினரை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவையில் உள்ள ஒரு தியேட்டரில் நடிகர் சிம்பு நடித்த மாநாடு என்ற படம் திரையிடப்பட்டு உள்ளது. அங்கு, நேற்று முன்தினம் இரவுக் காட்சியின்போது ரசிகர்களில் சிலர் கைதட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.
இதனால் இடையூறு ஏற்படுவதாக கூறி ஒரு தரப்பினருக்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த இரு கோஷ்டியினரும் திடீரென்று மோதலில் ஈடுபட்டனர். அவர்கள், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இந்த தாக்குதலில் கெம்பட்டி காலணியைச் சேர்ந்த மகேஷ்வரன் (24), கோட்டை மேட்டை சேர்ந்த முகமது நிஷார் (20) ஆகிய 2 பேர் காயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர், இது குறித்து தகவல் அறிந்த ரேஸ் கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருதரப்பினரை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.