கோவையில் மாநாடு படம் திரையிடப்பட்ட தியேட்டரில் கோஷ்டி மோதல் - 8 பேர் கைது..!

இந்த தாக்குதலில் கெம்பட்டி காலணியைச் சேர்ந்த மகேஷ்வரன் மற்றும் கோட்டை மேட்டை சேர்ந்த முகமது நிஷார் ஆகிய 2 பேர் காயம் அடைந்தனர்.


கோவை: கோவையில் நடிகர் சிம்பு நடித்து திரையிடப்பட்ட தியேட்டரில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் காரணமாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவையில் உள்ள ஒரு தியேட்டரில் நடிகர் சிம்பு நடித்த மாநாடு என்ற படம் திரையிடப்பட்டு உள்ளது. அங்கு, நேற்று முன்தினம் இரவுக் காட்சியின்போது ரசிகர்களில் சிலர் கைதட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.

இதனால் இடையூறு ஏற்படுவதாக கூறி ஒரு தரப்பினருக்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த இரு கோஷ்டியினரும் திடீரென்று மோதலில் ஈடுபட்டனர். அவர்கள், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இந்த தாக்குதலில் கெம்பட்டி காலணியைச் சேர்ந்த மகேஷ்வரன் (24), கோட்டை மேட்டை சேர்ந்த முகமது நிஷார் (20) ஆகிய 2 பேர் காயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர், இது குறித்து தகவல் அறிந்த ரேஸ் கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருதரப்பினரை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...