கோவையில் மாநாடு படம் திரையிடப்பட்ட தியேட்டரில் கோஷ்டி மோதல் - 8 பேர் கைது..!

இந்த தாக்குதலில் கெம்பட்டி காலணியைச் சேர்ந்த மகேஷ்வரன் மற்றும் கோட்டை மேட்டை சேர்ந்த முகமது நிஷார் ஆகிய 2 பேர் காயம் அடைந்தனர்.


கோவை: கோவையில் நடிகர் சிம்பு நடித்து திரையிடப்பட்ட தியேட்டரில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் காரணமாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவையில் உள்ள ஒரு தியேட்டரில் நடிகர் சிம்பு நடித்த மாநாடு என்ற படம் திரையிடப்பட்டு உள்ளது. அங்கு, நேற்று முன்தினம் இரவுக் காட்சியின்போது ரசிகர்களில் சிலர் கைதட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.

இதனால் இடையூறு ஏற்படுவதாக கூறி ஒரு தரப்பினருக்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த இரு கோஷ்டியினரும் திடீரென்று மோதலில் ஈடுபட்டனர். அவர்கள், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இந்த தாக்குதலில் கெம்பட்டி காலணியைச் சேர்ந்த மகேஷ்வரன் (24), கோட்டை மேட்டை சேர்ந்த முகமது நிஷார் (20) ஆகிய 2 பேர் காயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர், இது குறித்து தகவல் அறிந்த ரேஸ் கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருதரப்பினரை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...